Friday, December 27, 2013

27-12-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

 

27-12-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மார்கழி – ௧௨(12), வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend

இயற்கையை வணங்க வாருங்கள்

வரும 12-1-2014 அன்று "பொங்கல் விழா" அமைக்க உள்ளோம். கடந்தமுறை 10 மண்பானைகளில், விறகடுப்பில் செய்த பொங்கல் ஒன்றாக சேர்க்கப்பட்டு, இயற்கைக்கு நன்றி செலுத்தியபின் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இம்முறை தில்லி NCR பகுதியில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும், இப் பொங்கல் விழாவில் அவர்கள் அமைப்பு சார்பில் ஒரு குழுவாக வந்து கலந்து கொண்டு ஒரு புதிய நட்பு வட்டம் அமைய வகை செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பொங்கல் பானை என சமைத்து, அவற்றைக் கலந்து, ஒரு இனிய துவக்கத்தை கொண்டாட உள்ளோம். இவ்விழாவின் மூலம், அனைத்து அமைப்புக்களும் ஒன்றாக இணைந்து, ஒவ்வொரு வருடமும் ஓரிடமென பொங்கல் விழாவை ஒரு ஒற்றுமை விழாவாக கொண்டாடவதே இம்முறை நடக்கும் விழாவின் நோக்கம். அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவும் தேவை.

 
இவ்விழா சிறப்பாக நடக்க உதவ விரும்புவோர், கலை நிகழ்சிகள் நடத்த விரும்புவோர்  தயவு செய்து avvaitamilsangam@gmail.com என்ற முகவரியிலோ 0-8826655855, 0-9818092191 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.


இடம்: சங்கடஹர கணபதி கோவில் அருகே உள்ள திடல், வசுந்தரா என்கலேவ் , தில்லி (நியூ அசோக் நகர் மெட்ரோ நிலையம் அருகில்)

நாள்: 12-1-2014 ( ஞாயிறு)

நேரம்: காலை 0930 முதல்

 

முக்கிய குறிப்பு:

அடுத்த நாள் நாம் இல்லங்களில் கொண்டாட இருக்கும் போகி, பொங்கல் இவற்றிற்கு தேவையான பொருள்களும் வாங்கிச் செல்ல ஏதுவாக கடைகள் ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டு உள்ளோம். அதுவும் நடந்தால் மக்களுக்கு நல்ல வசதியாக இருக்கும், விழா மேலும் சிறக்கும் என்பது எங்கள் எண்ணம்.  முயற்சிகள் செய்துகொண்டு இருக்கிறோம்.


நாளொரு நாலடி323


பொருட்பால் பொதுவியல் புல்லறிவாண்மை  [தாழ்ந்த அறிவையே உயர்ந்த அறிவாகக் கருதிக்கொண்டு ஒழுகும் இயல்பு.] (INSUFFICIENT KNOWLEDGE.)

இமைக்கும் அளவிற்றம் இன்னுயிர்போம் மார்க்கம்
எனைத்தானும் தாங்கண் டிருந்தும் -தினைத்துணையும்
நன்றி புரிகல்லா நாணின் மடமாக்கள்
பொன்றிலென் பொன்றாக்கா லென்?

 

புல்லறிவுடையோர் தமதுவாழ்க்கையைப் பயனுடையதாக்கி இன்புறல் அறியார்.

 

பொருள்

இமைக்குமளவில் தம்இன்னுயிர் போம் மார்க்கம் எனைத்தானும் தாம்கண்டிருந்தும் -கண்ணிமைக்கும் அத்துணைச் சிறுபொழுதில் தமது இனிய உயிரானது பிரிந்துபோம்இயல்பை எவ்வகையாலுந் தாம் தெரிந்திருந்தும்,தினைத் துணையும் நன்றி புரிகல்லா நாண் இல்மடமாக்கள் பொன்றிலென் பொன்றாக்கால்என்-உலகில் உயிரோடிருப்பதற்குள்தினையளவாயினும் நற்செயல்கள் செய்து பிறவியைப்பயனுடையதாக்கிக் கொள்ளாத வெட்கமில்லாஅறியாமை மாந்தர் இறந்தாலென்ன, இறவாதுஇருந்தாலென்ன? இரண்டும் ஒன்றே.

Explanation(G. U. POPE):

Useless in life and unmourned in death.

What matters it whether they Hve or die—the shameless stupid people who do no good, not even as much as a grain of millet, though they see by every species of example the way in which their life so sweet to them, passes away in the twinkling of an eye ?

   உங்களுக்குத் தெரியுமா?

திருச்சிராப்பள்ளி (திருச்சி) -  காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்நகரம் தமிழகத்தில் உள்ள நான்கு முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருள், திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்து உள்ளது. திருச்சிராப்பள்ளி, தமிழ் நாட்டில் மக்கள் வாழ்ந்த மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இந்நகரத்தின் வரலாறு கிமு இரண்டாம் ஆயிரமாண்டு காலத்துக்கு முந்தையது. முற்கால சோழர்களின் தலைநகராக கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை விளங்கிய உறையூர் தற்போதைய திருச்சிராப்பள்ளியின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கரிகால் சோழன் கட்டிய உலகின் பழைய அணையான கல்லணை உறையூரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. 5ம் நூற்றாண்டில் இந்நகரம் பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. 6ம் நூற்றாண்டில் தென் இந்தியாவை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மன் மலைக்கோட்டையில் பல குடைவரை கோவில்களைக் கட்டினான். மேலும் படிக்க ...

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

நீதிபதிகள் நியமன குழுவுக்கு அரசியல் சட்ட அந்தஸ்து-தினகரன்

நீச்சல் குளம் கட்ட காலதாமதம்: ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் - nakkheeran publications

ஆம் ஆத்மிக்கு வெளிநாட்டு நிதியா?- மத்திய உள்துறை விசாரணை - தி இந்து

சிறந்த பெண் தடகள வீரர் "செரீனா வில்லியம்ஸ்"லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்

அஸ்வினுக்கு பாலி உம்ரிகர் விருது -தினமணி


நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

27/12/2013 (Friday)

 

 at 7 pm.

 

Aishwarya Mahaganapathy Temple, Keshav Puram, Lawrence Road, Delhi - 110035

Carnatic Vocal Concert by

 

Shri Vaidhyanathan (Hyderabad)

 

& Party

Asthika Samaj

 

011-27152951

29/12/13 - 7.00AM till 1.00PM

Ayyappa temple sector 17 - Rohini

 

 7AM : Rudrabishakam to Lord Sri Dharma saastha

Followed by. Lalitha sahasranama parayanam, Vishnu sahasranama japam 12 times and bhajan

1.00pm Deeparadhani – Annadhanam 

By Rohini sri Vishnusahasranama Satsang - Rohini

 

12-01-2014

Railway Community centrem Near Sanjay Lake, Brig, Hoshiar Singh Marg, Laxmibhai Nagar, New Delhi

 

56th Delhi Sasthapreethi Celebrations

Delhi Sasthapreethi Celebrations Committee

9811799051

9810641038

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments:

Post a Comment