Wednesday, June 4, 2014

04-06-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

04-06-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி-௨௧(21) புதன் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

பாரதி சிறுகதை போட்டி

பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக  

அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர்.

சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக்  கடைசி நாள்: 15 ஜூலை 2014

நாளொரு ஆத்திச்சூடி – 1

Resource:  http://www.aramseyavirumbu.com

உயிர் வருக்கம்

அறம் செய விரும்பு 

Aram seya virumbu
Desire doing righteous deeds

பொருள் விளக்கம் :
"அறம் செய விரும்பு" என்ற மிக உயர்வான பொருள் படும் இந்த வார்த்தைகளே மிகவும் சிறப்பான பொருள் விளக்கம். கடல் போன்ற விரிந்த பொருள் கொண்ட இந்த செய்யுளில் இருந்து ஒரு முத்தாக சொல்லுவதென்றால் "தனி மனித ஒழுக்கம்" கடைபிடிக்க விரும்பு.

சிறுகதை – சுமைதாங்கி (தொகுப்பு நூல்: ஆத்திசூடி அறநெறி கதைகள் – நா.மகேசன்):

வில்லூர் என்பது ஒரு சிறு கிராமம். அங்குள்ள மக்கள் விவசாயம் செய்து தமது வாழ்க்கையை நடத்தினர். மென்னாகம் ஊரில் உள்ள பெரிய சந்தையில் விலை பொருட்களை விற்பார்கள். இது ஆறு மைல் தொலைவில் இருந்தது. இங்கு பல ஊர்களிலும் இருந்து வியாபாரிகள் வந்து பொருட்களை வாங்குவர்.

 

வில்லூர் மக்கள் மென்னாகம் சந்தைக்கு பொருட்களை வண்டிகளிலும் தலைச் சுமையாகவும் எடுத்து செல்வர். பலர் வறியவர் என்பதால் அவர்களுக்கு மாட்டுவண்டிகள் கிடையாது. அதிகாலையில் எழுந்து தலைச் சுமைகளுடன் தெருவிலே நடந்து செல்வது அன்றாட காட்சியாகும். சந்தை கூடும் முன்பே போய்விட வேண்டும் என்பதற்காக பலர் ஓட்டமும் நடையுமாக களைப்புடன் செல்வார்கள்.

 

இப்படி செல்லும் மக்கள் நடுவழியிலே களைத்துவிட்டால் தமது சுமைகளை இறக்கிவைத்துச் சிறிது களைப்பு ஆறிப்போக விரும்புவர். ஆனால் எல்லோரும் தலைச் சுமைகளோடு போவதாலும், வேறு வழிப்போக்கர்கள் இல்லாததாலும் தமது சுமைகளை இறக்கி வைக்க வசதி இல்லாமல் அவதிப்படுவர். இதற்காக வழியில், ஓர் இடத்தில் சுமைதாங்கியை கட்ட வேண்டும் என்று மக்கள் முடிவு செய்தனர். சுமைதாங்கி தெரு ஓரத்தில் இருந்தால், அதன்மேல் தலைச்சுமையை பிறருடைய உதவி இல்லாமல் இறக்கி வைக்கலாம். மேலும், மற்றவர்கள் உதவி இல்லாமல் தலையில் ஏற்றிக்கொண்டு செல்லலாம்.

 

வில்லூர் மக்கள் சுமைதாங்கியை கட்ட தமது கிராமத்தில் உள்ளவர்களிடம் பணம் திரட்டினார்கள். அவ்வூரில் புண்ணியமூர்த்தி என்ற ஒரு பணக்காரன் இருந்தான். அவனிடமும் மக்கள் பணம் கேட்டனர். அவனோ "நான் சுமைதாங்கியை உபயோகிக்கப் போவதில்லை" என்று சிறிதும் தர்ம சிந்தனை இல்லாமல் மறுத்துவிட்டான். மக்கள் வேண்டிய பணத்தை திரட்டி சுமை தாங்கியை கட்டி முடித்தனர். பலரும் அந்தச் சுமைதாங்கியை உபயோகித்து களைப்பாறி கொண்டனர்.

 

வருடங்கள் பல சென்றன. புண்ணியமூர்த்தியின் வியாபாரம் நட்டம் அடையலாயிற்று. அவனிடம் இருந்த பணம், பொருள் எல்லாம் கடனுக்காக விற்கப்பட்டன; வறியவனானான்.

 

கூலி வேலை செய்யும் நிலையை அடைந்தான். ஒருநாள் அவன் கூலிக்கு பொருள் சுமக்க வேண்டி இருந்தது. பெரிய ஒரு சுமையை சுமந்து மென்னகாம் சந்தையில் கொடுக்க வேண்டும். அப்படி செல்லும் பொழுது களைத்துவிட்டான். சுமையை கீழே இறக்கி வைக்க ஒருவரும் வரமாட்டார்களா என்று ஏங்கினான். அப்பொழுது தெரு ஓரமாக இருந்த சுமைதாங்கி அவன் கண்களிலே பட்டது. தலைச்சுமையை இறக்கி வைத்துவிட்டு "அப்பனே ஆண்டவா" என்று ஒரு பெருமூச்சு விட்டான்.

 

சுமைதாங்கியிற் பொறிக்கப்பட்டு இருந்த எழுத்துக்களை புண்ணியமூர்த்தி பார்த்தான். அதிலே "அறம் செய விரும்பு" என்று எழுதப்பட்டு இருந்தது. கண்கள் கலங்கின. "இந்த சுமை தாங்கியை கட்டுவதற்கு பணம் கேட்டார்களே, நான் இது எனக்கு உதவாது என்று மறுத்துவிட்டேனே. எனக்கு இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு உதுவுமே என்ற நல்ல எண்ணம் இல்லாமல் இருந்தேனே. நான் பாவி, இனிமேலாவது தர்ம காரியங்களைச் செய்ய பின்னிற்கக் கூடாது" என்று தனக்குள்ளே கூறிக்கொண்டான்.

உங்களுக்குத் தெரியுமா?

அகிரா குரோசாவா இயக்கிய ஏழு சாமுராய்கள் உலகின் தலைசிறந்த திரைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.  

செய்திகள்

தில்லியில் கார் விபத்து: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம் -  தினமணி

ரிமோட் கண்ட்ரோல் மூலம் பீகார் அரசை இயக்கும் நிதீஷ்குமார் ... யாஹூ

பிரதமரிடம் ஜெ. அளித்த மனுவின் முக்கிய அம்சங்கள் தி இந்து

தமிழக ஆளுநராக ஜஸ்வந்த் சிங்குக்கு வாய்ப்பு ? - தினமணி

அல்போன்சா மாம்பழங்களை ஆய்வு செய்ய சிறப்பு குழு- தினகரன்  

முல்லை பெரியாறு விவகாரம் கேரளா அரசு புதிய முடிவு - தினமலர்

மின்வாரிய அதிகாரியை தாக்கியதாக புகார்: யஷ்வந்த் ...- தினமணி

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கிதி இந்து

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் ஷரபோவா - தினகரன்

வீடு வாடைகைக்கு    

Ready to move from 1.6.14.(Preference for vegetarian families) 2BHK flat available for rent at Kendriya vihar, sector 51, Noida. Fully furnished with vetrified tiles, comprising living/dining room, two bed rooms, two toilets, two balconies facing park. Flat situated in 1st floor. Sector close to City Centre Metro Station.

Expected rent: RS. 20,000/- Contact : 9810217028/9810170390

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

29.06.2014

09.30 AM Onwards

Malai Mandir

Ramakrishnapuram, New  Delhi

Mahakumbhabhishekam -2014

Cultural Programme

Thiruppugazh by Tiruppugazh A nbargal

Carnatic Music Concert by

Nadabhushanam Malladi Bros: Sri M.Sriram Prasad & Sri M.Ravi Kumar – Carnatic Vocal,

Sri V.Sanjeev – Violin,

Sri Parupally Subbaraya Phalgun - Mridangam

 

26175104

www.malaimandir.org.in

30.06.2014

05.30 PM Onwards

Thevaram Recital by:

Kodumudi Tiru B.Vasant Kumar Oduvar,

Myladuthurai Tiru Sivakumar Oduvar – Thevaram,

Tiru G.Raghavendra Prasath - Violin

Tiru V.Sankaraman  - Mridangam

01.07.2014

05.30 PM Onwards

Nadaswaram  Recital by:

Sri Kanchi Kamakoti Peetam Asthana Vidvangal

Sangeetha Maamethai, Kalaimamani Mannargudi Tiru M.S.K.Sankaranarayanan,

Mannargudi Tiru M.S.K. Venkadesan,

Kalarathna Laya Gyana Sudaroli Pollachi Tiru M.K. Suresh Babu

Thavil Elam Sudaroli, Sorchivai Selvan Pudulottai Tiru M.P. Natrajan

02.07.2014

06.00 PM Onwards

Kalyana Utsavam:

Sri Valli Devasena – Subramanya Tirukalyanam

Sri Meenakshi- Sundareshwarar  Tirukalyanam

Procession of Lord Valli Devasena Subramanya (in peacock Vahanam) and Meenakshi Sundareshwarar (in Rishaba Vahanam)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment