Tuesday, June 10, 2014

10-06-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

10-06-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி-௨௭(27) செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர்.

சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக்  கடைசி நாள்: 15 ஜூலை 2014

நாளொரு ஆத்திச்சூடி – 6

Resource:  http://www.aramseyavirumbu.com

உயிர் வருக்கம்

ஊக்கமது கைவிடேல்

Ookkamadhu Kaividael

 

பொருள்:

உற்சாகத்தை (தன்னம்பிக்கை/ விடாமுயற்சி) இழக்காதே

Never give up confidence and hope

============

ஊக்கமது உற்சாகம்/ தன்னம்பிக்கை/ விடாமுயற்சி

கைவிடேல் கை விடாதே

============

சிறுகதை:

Resource:  http://athichudi.blogspot.kr/  

ஒரு தொழிலோ அல்லது வேறு என்ன காரியமாக இருந்தாலும் அதை செய்கின்ற காலத்தில் எதிர்பாரா இடையூறுகள் எது வந்தாலும் எக்காரணம் கொண்டும் நடுவில் நிறுத்தி விடாமல் அதில் முழுக்கவனம் செலுத்தி எடுத்த காரியத்தை முடித்து விட வேண்டும்.

 

ஸ்காட்லாண்டில் நாட்டில் ராபர்ட் புரூஸ் என்ற அரசன் தன்னுடைய எதிரிகளோடு பல தடவை போர் புரிந்து தோல்வியடைந்து கடைசியில் உற்சாகம் குறைந்து இனி தன் முயற்சியால் ஒன்றும் பயனில்லை என்று கருதி அங்கிருந்து ஓடி ஒளிந்து கொள்ளும்படியான நிலையில் அவன் மட்டும் தனியாக ஒரு குடிசையில் வாழ நேரிட்டது.தான் அடைந்த இந்த இழிந்த நிலையைக் குறித்து தினமும் வருந்திக் கொண்டிருந்தான்.

 

ஒருநாள் புரூஸ் தனது குடிசையில் மல்லாந்து படுத்தபடி இனி என்ன செய்வது என்று கவலையோடு யோசித்துக் கொண்டிருக்கையில்,மேலே உத்தரத்தில் சிலந்தி ஒன்று ஒரு உத்தரத்தில் இருந்து இன்னொரு உத்தரத்திற்கு தன் வலையை கட்ட எண்ணி அது இருந்த உத்தரத்தில் தன்மெல்லிய நூலை கட்டி விட்டு மற்றொரு உத்தரத்திற்கு பாய்ந்து கொண்டு இருந்தது,இரண்டு உத்தரத்திற்கும் இடைவெளி அதிகம் இருந்ததால் அதை எட்ட முடியாமல் சிலந்தி கீழே விழுந்து விட்டது.ஆனாலும் அதற்காக பின்வாங்காத சிலந்தி மீண்டும் மேலே ஏறி முன் போலவே அடுத்த உத்தரத்திற்கு பாய்ந்தது!இந்த முறையும் கீழே விழுந்து விட்டது,இப்படியே திரும்ப திரும்ப ஆறு தடவை முயன்றும் சிலந்தி தன் முயற்சி பலன் அளிக்காமல் கீழே விழுந்து விட்டது.கீழே விழுந்ததில் மிகவும் களைப்படைந்து போன சிலந்தி அப்படியே அசையாமல் கீழே கிடந்தது.

 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த புரூஸ் இந்த சிலந்தியும் நாமும் ஒரே நிலையில் இருக்கிறோம்,நாம் பல தடவை போர் புரிந்து தோற்று களைத்தோம், இந்த சிலந்தியும் தனது முயற்சியில் பல தடவை தோற்று களைப்படைந்து விட்டது, இனி இதற்கும் வழியில்லை,அதே போல் நமக்கும் வேறு வழி காணோம் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு சிலந்தியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

சிறிது நேரம் அசையாமல் கிடந்த சிலந்தி மெதுவாக அசைந்தது,பிறகு மெதுவாக அங்கிருந்து நகன்று முன்போல மேலே ஏறத்தொடங்கியது! புரூஸ் கண்கொட்டாமல் அதையே அதிசயத்தோடு பார்த்து கொண்டிருக்கும்போது,மேலே வந்த சிலந்தி தன் முழு பலத்தோடு ஒரு உத்தரத்தில் இருந்து இன்னொரு உத்தரத்திற்கு பாய்ந்தது, இந்த முறை தன் விடாமுயற்சியால் அது நினைத்தபடி மறு உத்தரத்தை அடைந்தது.

 

இவையெல்லாவற்றையும் பார்த்த புரூஸ் இது நமக்கு கடவுள் காட்டிய நல்வழியாக நினைத்து நாமும் முயல்வோம் என்று இ துவரை தான் பட்ட கவலையை விட்டு பல சிரமங்களுக்கு இடையில் சிதறுண்டு போன தன் படையைத் திரட்டி மிகவும் ஊக்கமுடன் மீண்டும் தன் எதிரியுடன் போர் செய்தான்.

இந்த முறை தன் விடா முயற்சியால் எதிரியை முறியடித்து அதில் வெற்றியும் அடைந்தான்.

 

'ஊக்கமது கை விடேல் 'என்னும் நீதியை அந்த சின்னஞ்சிறு சிலந்தியின் செய்கையை அறிந்த ராபர்ட் புரூஸ் தானும் அதே போன்று நடந்ததால் மீண்டும் உற்சாகத்துடன் மகிழ்ச்சி யாகவும் வாழ்ந்தான்.

உங்களுக்குத் தெரியுமா?

வேதி என்று அழைக்கப்படும் வே. தில்லைநாயகம் (சூன் 10, 1925 - மார்ச் 11, 2013) தமிழக நூலகத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுபவர்.

·         இந்திய நூலக இயக்கம் என்னும் இவரது நூல், இவர் 40 ஆண்டுகளாகச் சேகரித்த தகவல்கள் 400 பக்கங்களில் 4000 ஆண்டு வரலாற்றைக் கொண்டதாக இருக்கிறது.

·         "இந்திய நூலக இயக்கம்" நூலைப் பாராட்டி 1982 இல் உலகப் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது.

·         "இந்திய அரசமைப்பு" தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பரிசினைப் பெற்றது.

·         இவரது குறிப்பேடு என்னும் நூல்தான் தமிழில் முதன்முதலாக வெளிவந்த ஆண்டுநூல் (Year Book) ஆகும்.

·         இவர் எழுதிய நூலக உணர்வு (1971), வள்ளல்கள் வரலாறு (1975), இந்திய நூலக இயக்கம் (1978) முதலியன தமிழ்நாடு அரசின் முதல் பரிசு பெற்றவை.

மேலும் படிக்க  

செய்திகள்

கள்ளச் சந்தையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: ஜேட்லிதி இந்து

பொருளாதாரத்தை மீட்க நடவடிக்கை: குடியரசுத் தலைவர் உறுதி- தினமணி 

முல்லை பெரியாறு: கேரள சட்டசபையில் அதிரடி தீர்மானம் - யாஹூ

டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு ஒளவையார் விருது- தினமணி 

விமான நிலையங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு - தி இந்து

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை சராசரியைவிட குறைவாகவே இருக்கும்: வானிலை ஆய்வு மையம்- தினமணி 

 உலகக் கோப்பை - ஒரு ரவு சென்னை ரசிகர்களே எங்கள் பலம்-தோனி

 ண்ட் அப் - தினமணி 

சென்னை ரசிகர்களே எங்கள் பலம்-தோனி- தி இந்து

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

12.06.2014

06.30 PM Onwards

Sri Devi Kamakshi Mandir, New Delhi

121st  Jayanthi Celebratio​ns of Sri Chandrasekharendra Saraswathi Swamigal , Mahaswami of Kanchi Kamakoti Peetam

 

 

 

15.06.2014

06.30 PM Onwards

Sri Venkateshwar International School, Sector 18-B, Dwarka, New Delhi

BHAJAN SANDHYA

Performance by Smt Mahathi & Party at 6.30 PM.

The Delhi Bhajana Samaj and The Management Committee of Sri Ram Mandir

 

29.06.2014

09.30 AM Onwards

Malai Mandir

Ramakrishnapuram, New  Delhi

Mahakumbhabhishekam -2014

Cultural Programme

Thiruppugazh by Tiruppugazh A nbargal

Carnatic Music Concert by

Nadabhushanam Malladi Bros: Sri M.Sriram Prasad & Sri M.Ravi Kumar – Carnatic Vocal,

Sri V.Sanjeev – Violin,

Sri Parupally Subbaraya Phalgun - Mridangam

 

26175104

www.malaimandir.org.in

30.06.2014

05.30 PM Onwards

Thevaram Recital by:

Kodumudi Tiru B.Vasant Kumar Oduvar,

Myladuthurai Tiru Sivakumar Oduvar – Thevaram,

Tiru G.Raghavendra Prasath - Violin

Tiru V.Sankaraman  - Mridangam

01.07.2014

05.30 PM Onwards

Nadaswaram  Recital by:

Sri Kanchi Kamakoti Peetam Asthana Vidvangal

Sangeetha Maamethai, Kalaimamani Mannargudi Tiru M.S.K.Sankaranarayanan,

Mannargudi Tiru M.S.K. Venkadesan,

Kalarathna Laya Gyana Sudaroli Pollachi Tiru M.K. Suresh Babu

Thavil Elam Sudaroli, Sorchivai Selvan Pudulottai Tiru M.P. Natrajan

02.07.2014

06.00 PM Onwards

Kalyana Utsavam:

Sri Valli Devasena – Subramanya Tirukalyanam

Sri Meenakshi- Sundareshwarar  Tirukalyanam

Procession of Lord Valli Devasena Subramanya (in peacock Vahanam) and Meenakshi Sundareshwarar (in Rishaba Vahanam)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment