Monday, April 7, 2014

07-04-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

07-04-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி-௨௪(24) திங்கள, திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 4

பூகம்பம்

அப்பொழுது மீண்டும் அவளுடைய மனதில், சென்ற பயங்கரமான இரவில் நிகழ்ந்த பயங்கரமான செய்திகள் நினைப்புறலாயின. பூகம்பம் தோன்றினவுடனே மகாலிங்கையருடைய தந்தையாகிய கிழவர், ''ஐயையோ, பூமி ஆடுகிறதே! நாமெல்லாரும் வாயிற்புறத்திலுள்ள குச்சிலுக்குப் போய் விடுவோம். அதுதான் இவ்வீட்டில் சற்றே உறுதியான இடம். என்னை அங்கே கொண்டு விடுங்கள்'' என்று அலறினார். அந்தச் சத்தம் மாத்திரம் விசாலாட்சியின் செவியிற்பட்டது. அப்புறம் நடந்த பேச்சொன்றும் அவள் செவியிற் படவில்லை. வாயிற் குச்சிலுக்குள் வெளித் திண்ணை வழியாகத்தான் புகலாம். வீட்டுக்குள்ளிருந்தபடியே அங்குவர வழியில்லை. எனிலும், ஒரு சாளரப் பொந்து வழியாக அந்தக் கிழவருடைய பேரோலம் மாத்திரம் புயற் காற்றொலியையும் மிஞ்சி அவளுடைய செவியிற்பட்டது.

 

ஆனால், 'அங்ஙனம் அவர்கள் குச்சிலுக்குள் வருவது மாத்திரம் சாத்தியமில்லை' யென்பதை அவள் உடனே ஊகித்துக் கொண்டாள். ஏனெனில், உள்ளேயிருந்தவர்கள் வீட்டு வாயிற்கதவைத் திறந்தன்றோ, திண்ணையிலேறி அதன் வழியாகக் குச்சிலுக்குள் வரவேண்டும்? வாயிற்கதவைத் திறந்த மாத்திரத்திலே சப்த மேகங்களும், ஊழிக்காற்றும் வீட்டுக்குள் புகுந்து விடுமன்றோ? ஆதலால், அவர்கள் வெளியேற வில்லையென்று நினைத்துக் கொண்டாள். ஓரிரண்டு கணங்களில் திடீரென்று உள் வீட¦ல்லாம் இடிந்து விழுந்த ஒலியும், அங்கிருந்தோர் எல்லாம் கூடியலறிய பேரொலியும், அவள் செவியிற்பட்டன. எல்லோரும் செத்தார்கள் என்று நிச்சயித்துக் கொண்டாள். தானிருந்த குச்சிலும் விழுமென்று அவள் மிகவும் எதிர்பார்த்தாள். அது விழவில்லை. அதற்குள்ளே பூகம்பம் நின்று போய்விட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் புயற்காற்றும் மழையும் அடங்கிப் போயின.

 

இச்செய்திகளையெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டு விசாலாட்சி தன்னைச் சூழ இடிந்து கிடக்கும் வீடுகளையும் ஒடிந்து கிடக்கும் மரங்களையும் பார்த்து நிற்கையிலே, குச்சிலுக்குள்ளிருந்து ''குவா!குவா!'' என்ற சத்தம் வந்தது. உள்ளே போய்ப் பார்த்தாள். அண்ணன் மனைவியாகிய கோமதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து கிடந்தது. விசாலாட்சி அதற்கு வேண்டிய சிகிச்சைகளெல்லாம் செய்து கொண்டிருக்கையில், கோமதிக்கு மரணாவஸ்தை நேர்ந்துவிட்டது. அவள் சாகும்போது:-''விசாலாட்சி!விசாலாட்சி! நான் இரண்டு நிமிஷங்களுக்கு மேல் உயிருடனிருக்க மாட்டேன். என் பிராணன் போகு முன்னர் உன்னிடம் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறேன். அதை உன் பிராணன் உள்ளவரை மறந்து போகாதே! முதலாவது, நீ விவாகம் செய்து கொள். விதவா விவாகம் செய்யத்தக்கது. ஆண்களும் பெண்களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால், ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய், ஆண்களுக்குப் பெண்கள் அஞ்சி ஜீவனுள்ளவரை வருந்தி வருந்தி மடியவேண்டிய அவசியமில்லை. ஆதலால், நீ ஆண் மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன் சென்னைப் பட்டணத்துக்குப் போய் அங்கு கைம்பெண் விவாதத்துக்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து, அவர்கள் மூலமாக, நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு. இரண்டாவது, நீயுள்ளவரை என் குழந்தையைக் காப்பாற்று. அதற்கு சந்திரிகை என்று பெயர் வை'' என்றாள்.

 

விசாலாட்சி 'சரி' என்றாள். கோமதியின் உயிர் பரலோகஞ் சென்று விட்டது.

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

பீக்கிங் மனிதன் 250,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த மனிதன். இவன் முழுவளர்ச்சியடையாத மனிதக்குரங்கு மனிதன். 1929 இல் பீக்கிங் மனிதனின் மண்டையோட்டுப் புதையுருவம் சீனாவின் பீக்கிங் நகரருகில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனாலேயே இம்மனிதனுக்கு இப்பெயர் வழங்கப்பட்டது. பீக்கிங் மனிதர்கள் கல்லாயுதங்களைப் பயன்படுத்தினர். நெருப்பின் பயனை அறந்திருந்தனர்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மக்களவைத் தேர்தல்: இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு- தினமணி

அநீதி இழைத்தவர்களை பழிதீர்க்க கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு தேர்தல்: முஸாபர் நகர் கலவரம் பற்றி அமித் ஷா பேச்சு சர்ச்சை -  தி இந்து

 சொத்து விவரங்களை மறைத்தால் சிறை தண்டனை: வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை -  தி இந்து

ஐ.மு.கூட்டணி அரசு மீது பா.ஜ.க.,ஊழல் குற்றசாட்டு:பிரதமர் மறுப்பு - தினமலர்

வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை -  தினமணி

ஏர் பிஸ்டல் உலகத் தரவரிசை: இந்தியாவின் ஹீனா முதலிடம்-  தி இந்து

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

07/04/2014

 

Sri Devi Kamakshi Mandir, New Delhi

28th year Vasantha Navaratri Utsavam – 2014

Sri Meda Saraswathu Sahita

Sri Vidya  Navavarna Homam

Vidhya Abhivrudhi – Maha saraswathi

 

 

26867240

26520202

08/04/2014

 

Sri Nava Chandi Homam

Sakala Kamana Prapti – Gold Kavacham

08/04/2014 05.15 AM onwards    

Anandam, NTPC Community Centre, Sec 33, Noida

Sri Rama Navami celebratio​ns

Sri Vishnu Sahasranama Satsangam Noida

 

08/04/2014 to 13/04/2014

Sri Baba Balak Nath Mandir

Pocket - 2, Mayur Vihar, Phase - 1, Delhi

SREE RAMA NAVAMI FESTIVAL

Mayur Vihar South Indian Association

22751324

E-mail: mvsia81@gmail.com

08/04/2014 06.00 AM onwards   

Sri Ishta Siddhi Vinayakar Temple

Ayur Vihar Ph-3,

Ramanavami Celebrations

Sri Adi Sankara Sewa Samajam

22621464

12/04/2014 05.00 PM onwards   

Divyanama Bhajan by Namasankeerthana Kalanidhi Vibhooshana Bhagawatha Sironmani Sri V.Dakshinamoorthy Bhagawathar

13/04/2014 06.00 AM onwards   

Panguni Uthiram Celebrations

08/04/2014 to 13/04/2014

Ram Mandap, 'Y' Avenue, Sarojini Nagar,

New Delhi -110 023,

Sri Rama Navami Celebrations 2014

Upanyasam for 5 days from 08.04.2014 to 12.04.2014 By

Erode Br. Shri. BALAJI BAGAVATHAR at 06.30 P M

South Indian Samaj

rammandap@gmail.com

011-24671303

08/04/2014

07.00 PM onwards     

Aishwarya Managanapathi Temple , Keshavpuram, Delhi

Special Bhajan by Kalladai Kuruchi Group.

 

9350899916 / 9718478274

14/04/2014

07.00 PM onwards   

Bhajan / padi poojai

 (Swamiye Saranam Ayyappa) Tamil New Year

15/04/2014

06.00 AM onwards   

 Vishukani

16/04/2014

07.00 PM onwards   

Special Bhajan by Anandarama Bhagawadar from Chennai.

09/04/2014

07.00 PM onwards   

AMALTAS, India Habitat Center

Lodi Road, New Delhi

Rasikapriya's SANKALP

Carnatic vocal by Kum. A.Akashaya

Violin: Sh.N. Arvindd

Mridangfam: Sh.K.N. Padmanabhan

Rasikapriya

09818192497

13/04/2014 06.30 PM onwards   

Sri Sankatahara Ganapathy Temple,        Vasundhara Enclave, East Delhi                

Sri Rama Navami Celebrations

Seetha Kalyanam by

Sri Dakshinamurthy Bhagawathar & Group

R.K. Vasan

President

8826655855

14/04/2014 06.30 PM onwards   

Shri Ram Mandir, HAF Pocket II, Sector-7, Dwarka

Panchanga Patanam

Dwarkalaya

 

20/04/2014 08.00 AM onwards   

Thiruppugazh Isai Vazhipadu

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment