Saturday, May 3, 2014

03-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

03-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை-௨௦ (20) சனி , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 26

கோபாலய்யங்காருக்கு விவாகம்

அப்போது வேங்கடாசல நாயுடு சொல்லுகிறார்:- ''கேளும், சுப்புசாமிக் கோனாரே! பாவம் என்பதெல்லாம் வீண் பேச்சு. இது சாஸ்த்ரோக்தமான விஷயம். இதில் யாதொரு பாவமும் கிடையாது. அப்படியே பாவமிருந்த போதிலும், அது மாப்பிள்ளையையும் பெண்ணையும் சாருமேயன்றி, உம்மைச் சாராது. அது தவறி, உமக்கும் சிறிது பாவம் வந்து நேரக்கூடுமென்றாலும், அதற்குத் தகுந்த பிராயச்சித்தங்கள் பண்ணிவிடலாம். பெருமாள் கோயிலுக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தினால் போதும். அதில் எவ்வளவு கொடிய பாவமும் வெந்து சாம்பலாய்ப் போய்விடும். உமக்கு எத்தனை பணம் வேண்டுமானாலும், அய்யங்காரவர்கள் கொடுப்பார்'' என்றார்.

 

பணம் என்ற மாத்திரத்திலே பிணமும் வாயைத் திறக்கும் என்பது பழமொழி. சுப்புசாமிக் கோனார் ஏறக்குறையக் கொட்டாவியளவுக்கு வாயைப் பிளந்தார்.

 

''எனக்குக் கொஞ்சம் கடன் பந்தங்களும் இருக்கின்றன. அவற்றையுந் தீர்த்துவைக்க ஏற்பாடு செய்தால் நல்லது'' என்று சுப்புசாமிக் கோனார் சொன்னார்.

 

''தங்களுக்கு எத்தனை ரூபாய்க்குக் கடன் இருக்கிறது?'' என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

 

''ஆயிரம் ரூபாய் கடன் இருக்கிறது'' என்றார் கோனார்.

 

''மூவாயிரம் ரூபாய் கொடுக்கிறேன்; போதுமா?'' என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

''ஓ! யதேஷ்டம்! இந்த வாரத்துக்குள்ளே விவாகத்தை முடித்துவிடலாம்'' என்று சுப்புசாமிக் கோனார் சொன்னார். அப்பால் மீனாட்சியை அழைத்து அவளுடைய சம்மதத்தையும் தெரிந்து கொண்டால் நல்லதென்று கோபாலய்யங்கார் கூறினார்.

 

''அவள் இப்போது வீட்டிலில்லை. நானே அவளிடம் சொல்லி விடுகிறேன்: அவள் சிறு குழந்தை. அவள் பிறந்ததுமுதல் இதுவரை என் வார்த்தையை ஒருமுறை கூடத் தட்டிப் பேசியது கிடையாது. இப்போது இத்தனை உயர்ந்த, இத்தனை மேன்மையான சம்பந்தம் கிடைக்குமிடத்தில் அவள் என் சொல்லைச் சிறிதேனும் தட்டிப் பேசமாட்டாள்'' என்றார் கோனார்.

 

''எதற்கும் அவளை அழைத்து ஒருமுறை அவளிடமும் கேட்டால் தான் என் மனம் சமாதானமடையும். நாங்கள் இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறோம். அவளை அழைப்பியுங்கள்'' என்று கோபாலய்யங்கார் சொன்னார். அங்ஙனமே கோனார் ஒரு ஆளைவிட்டு மீனாட்சியை அழைத்து வரும்படி செய்தார். மீனாட்சி வந்தாள். அவளைத் தனியாக அழைத்துப் போய் சுப்புசாமிக் கோனார் விஷயங்களைத் தெரிவித்தார். மாப்பிள்ளையின் படிப்பையும், செல்வத்தையும், பதவியையும் மிகவும் உயர்வாக்கி வர்ணித்தார். மாப்பிள்ளையின் அழகை அவள் பார்க்கும்படி அவரையும் காண்பித்தார். அவள் அவருக்கு வாழ்க்கைப்பட சம்மதமுற்றாள். சிறிது நேரத்துக்குள் மகளையும் அழைத்துக்கொண்டு சுப்புசாமிக் கோனர் புறத்து திண்ணைக்கு வந்து சேர்ந்தார். அவளுடைய விழிகளை கோபாலய்யங்கார் நோக்கினார். அவள் எதிர் நோக்களித்தாள். 'கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின், வாய்ச்சொற்கள் என்ன பயனுமில'' என்றார் திருவள்ளுவ நாயனார். அவளைப் பார்த்த மாத்திரத்திலே தம்மை மணம் புரிய சம்மதப்பட்டு விட்டாளென்று கோபாலய்யங்காருக்குத் தெளிவாகப் புலப்பட்டு விட்டுது. எனினும், பரிபூர்ணநிச்சயமேற்படுத்திக் கொள்ளுமாறு அவர் சுப்புசாமிக் கோனாரை நோக்கி, ''மீனாட்சி என்ன சொல்லுகிறாள்?'' என்று கேட்டார்.

''அவளிடத்திலே நேராகக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே'' என்றார் கோனார்.

 

''என்ன மீனாட்சி? என்ன சொல்லுகிறாய்? என்னை மணம் புரிந்து கொள்ள சம்மதந்தானா?'' என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

மீனாட்சி ''சம்மதம்'' என்று மெதுவாகக் கூறித் தலைக்கவிழ்ந்தாள். கோபலயங்காருக்கு ஜீவன் மறுபடி உண்டானது போல் ஆயிற்று. அவர் முகத்தில் புன்னகை தோன்றிற்று.

 

அந்த வாரத்திலேயே கோபாலய்யங்காரும் மீனாட்சியும் பிரமஸமாஜத்தில் சேர்ந்து கொண்டார்கள். அவ்விருவருக்கும் பிரம ஸமாஜ விதிகளின்படி, சென்னப்பட்டணத்தில் ஸமாஜக் கோயிலிலே விவாகம் நடைபெற்றது. விவாகம் முடிந்தவுடனே கோபாலய்யங்கார் தமது மனைவியை அழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்குப் போய் அங்கு தம் உத்தியோகத்தில் சேர்ந்து கொண்டார்.

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

 

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

சென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவம்: 4 மாநிலங்களில் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை-   தினமணி

தமிழகத்தில் மீன்பிடி தடைக் காலத்தில்ரூ.10 ஆயிரம் உதவித்தொகை ... - தினமலர்

மூன்றாவது அணி ஆட்சி அமைக்க ஆதரவு கிடையாது ராகுல் காந்தி -  தினத் தந்தி  

பாகிஸ்தானின் ரத்தநாளம் காஷ்மீர்:ராணுவ தளபதி பேச்சு -  தி இந்து

இந்திய மாம்பழத்துக்கு தடை : பிரிட்டன் பார்லியில் விவாதம் -  தினமலர்

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 350 பேர் பலி -  தினத் தந்தி

அடுத்தடுத்து வெடிகுண்டு புரளி: சென்னை போலீஸ் எச்சரிக்கை -  தி இந்து

மெக்கல்லம், ஜடேஜா அபாரம்: சென்னைக்கு 5-வது வெற்றி -  தினமணி

வீடு வாடகைக்கு   

1BHK flat available for rent/lease in Pratap Vihar,near Santhosh Medical College, Ghaziabad, just 4 kms from sector 63, Noida. Nominal rate, only for south indians. Contact Dr Ram Shanmugam, Safdarjang Hospital. Mobile: 9716934196,9868436946 in fb as Ram Shanmugam.

5 Bedroom floor available on Rent at Sector 92, Noida. 5 Bedroom with Bathroom, Hall, Kitchen portion available in the 2nd floor with independent entry and good enough privacy. House owner in the G/Floor and F/Floor is occupied by doctor couples. Secured with Surveillance camera and provision for 24 Hours SOFT water, it is ideal for a group of employed professionals of either gender. For details Contact: R. Manikandan Mobile: +91 9899165543

மணமகன் / மணமகள் தேவை   

Sh. Srinivasan (alias Arun), B.S.Marine Engineering from BITS, Pilani employed in Merchant Navy as an Engineer, DOB 15.3.1986, Star Barani, Gothram Haritham Iyer , Father Sh. N.S.Ganapathy Subramanian based in Hari Nagar, New Delhi. Contact No 98993 29688 / 2812 4512 Mail ID: gsubramanian1953@gmail.com

Ms. Gayathri, B.Tech (Computer Science) working with Intra Info Technology –Noida,Height 5'5",DOB 29.4.89 Star Avittam 2nd Padam,Gothram Bharadwajam,Rasi Makara,Sect Iyer Vadama,Parents Smt. Bhuvaneshwari & Sh. Mahadevan.B.,Sibling/s 1 brother younger. Doing Btech (Mech ) from Amrita, Bangalore. Contact: Sh. Bhuvaneshwari Mahadevan,  Mobile: 99119-21989, Mail ID: bhuvana.gayu_1989@hotmail.com.  Resident of Delhi.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

03/05/2014

06.00 PM onwards   

India International Centre

C.D. Deshmukh Auditorium, 40 Max Muelier Marg,  New Delhi

 

Mridangam Arangetram of Master Manik Charan Disciple of Karaikudi Shri Padmanabhan Srinivasan.

 

 

04/05/2014

06.00 PM onwards   

Yuva  Shakti Model School, Sector-3, Rohini, Delhi-110085

Rasikapriya Annual Day Celebrations -2014

 

 

Rasikapriya

9818192497

9810429874

04/05/2014

 

Kanchi Kamakoti Bhavanam – Delhi in Sri Devi Kamkashi Mandir, Opp. J.N.U. East Gate, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi 110 067.

40th year  Samashti Upanayanam

Sri Kanchi Kamakoti Peetam

 

04/05/2014

06.00 PM onwards   

Delhi Karnataka Sangha, Sec-12,

R.K.Puram

Bhakti Vandana

Bharatanatyam Dance Recital

Nishchintam Dance & Music Academy

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment