Thursday, May 8, 2014

08-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

08-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை-௨௫(25) வியாழன் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 30

விசாலாட்சிக்கு நேர்ந்த சங்கடங்கள்

தலைமயிர் வளர்த்துக் கொண்டே ஓரிரண்டு வருஷம் நாங்கனேரி அவளுடைய தாயுடன் பிறந்த மற்றொரு மாமன் வீட்டில் சந்திரிகையுடன் வந்து குடியிருந்தாள். அந்த ஊரில் அந்தணர்கள் அவள் மீது அபாரமான பழிதூற்றத் தொடங்கிவிட்டார்கள். அந்தத் தூற்றுதல் பொறுக்க மாட்டாதபடியாலேதான் அவள் அவ்வூரை விட்டுப் புறப்பட்டு வழி நெடுகத் தீர்த்த யாத்திரை செய்து கொண்டு சென்னப் பட்டணம் வந்து சேர்ந்திருக்கிறாள். ''இந்த ஊரில் எனக்குப் பழி பொறுக்க முடியவில்லை. மாமா, நான் காசிக்குப் புறப்பட்டுப் போய் கங்கைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்து நாளடைவில் என் பிராணனை விட்டு விடுகிறேன். எனக்கு வழிச்செலவுக்கு ஏதேனும் பணம் கொடும்; நான் அங்கே சென்று பிச்சையெடுத்து இந்தக் குழந்தை சந்திரிகையையும் காப்பாற்றி நானும் பிழைத்துக் கொள்கிறேன்'' என்று அவள் நாங்கனேரியை விட்டுப் புறப்படுமுன் தன் மாமனிடம் பிரார்த்தனை செய்து கொண்டாள்.

 

''இந்தக் குழந்தைக்கு விவாகம் பண்ணவேண்டிய பருவம் நேர்ந்தால் அப்போதென் செய்வாய்?'' என்று மாமா கேட்டார்.

 

''அங்கே நம்முடைய தமிழ்த் தேசத்துப் பிராமணர் அனேகர் குடியேறியிருக்கிறார்கள். இனி மேன்மேலும் அதிகமாகக் குடியேறி வருவார்கள். யாத்திரைக்காக வேறு, வருஷந்தோறும் நம்மவர் அனேகர் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அத்தனை ஜனங்களில் என் சந்திரிகைக்கொரு மாப்பிள்ளை கிடைக்காமலா போகிறான்?'' என்று விசாலாட்சி கேட்டாள்.

 

உடனே அவர் விசாலாட்சியின் கையில் ஐந்நூறு ரூபாய் வெள்ளி நாணயங்களாக ஒரு பையில் கட்டிக்கொடுத்து, ''இதைக் கொண்டுபோய், ரயில் செலவு போக மிஞ்சியதை அங்கு யாரேனும் ஸாஹ¥கார் கையில் வட்டிக்குக் கொடுத்து வட்டி வாங்கி ஜீவனம் செய்து கொண்டிரு. அடிக்கடி இங்கு வந்து போய்க் கொண்டிரு. உனக்கு அப்போதப்போது என்னாலான உதவிகளைச் செய்துகொண்டு வருகிறேன். பயப்படாதே!'' என்று சொல்லி மாமா இவளையனுப்பி விட்டார். ஊராருடைய தூற்றல் பொறுக்க மாட்டாமையால் அவருக்கும் இவளை எப்படியேனும் அந்த ஊரை விட்டனுப்பி விடுவதில் சம்மதமாகவேயிருந்தது. அவளுடைய இஷ்டத்துக்கு விரோதமாக அவளை மொட்டையடித்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்த அவருக்கு மனம் இல்லை. அவர் அப்படியே கட்டாயப்படுத்தியிருந்தாலும், அவள் அதற்குக் கட்டுப்பட்டிருக்க மாட்டாள். அவள் கட்டுப்பட்டு மொட்டையிட்டுக் கொண்டாலும் அதைப் பார்க்க அவருக்கு மனமிருந்திராது. அவருக்கு விசாலாட்சியின் மீது அத்தனை தூரம் பிரியம். அவளைத் தன் சொந்த மகள் போலவே கருதினார்.

எனவே, அவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு விசாலாட்சி புறப்பட்டு வழி நெடுக ஸ்தல யாத்திரை செய்த சமயத்தில் அவளுடைய கற்பையழிக்கவும், அவள் கையிலிருந்த பணத்தை அபகரித்துக் கொள்ளவும். அல்லது அவ்விரண்டு வகைப் பாதகச் செயல்களையும் கலந்து செய்யவும் பல ஆண்மக்கள் முயன்றனர். ஆனால் அவளை சாஸ்த்ரோக்தமாக விவாகம் செய்துகொண்டு அவளுடன் சதிபதியாக வாழக்கூடியவனாக அவளுக்கு எவனும் தென்படவில்லை. எனவே முழுதும் ஆசாபங்கமுற்றவளாய், அதனால் ஒருவித முரட்டுத் தைரியம் அதிகப்பட்டுத்தான் இவள் ஜீ. சுப்பிரமணிய அய்யரிடத்திலும், அப்பால் வீரேசலிங்கம் பந்துலுவிடத்திலும், இத்தனை பெருந் துணிவுடன் தனக்கு வரன் தேடிக் கொடுக்கும்படி வற்புறுத்தக் கூடியவளாயினாள். அப்பால், மேலே கதையை நடத்துவோம்.

 

இப்போது, அதாவது 1905-ம் வருஷ ஆரம்பத்தில் கார்காலத்தில் ஏகாதசி இரவில், மயிலாப்பூர் வக்கீல் சோமநாதய்யர் வீட்டில் தரைப்பகுதியில் ஓரறையில் விசாலாட்சி சந்திரிகையுடன் படுத்திருந்த கதையை மேலே சொல்லுவோம்.

 

அவளுடைய கரிய கூந்தல் அந்த நேர்த்தியான விளக்கொளியில் மிக அழகாகப் பரந்துகிடந்தது. அவளுடைய முகம் பூர்ணசந்திரனைப் போலே ஒளி வீசிற்று. அவளுடைய மார்பு மெல்லிய பச்சைப்பட்டு ரவிக்கையின் மீது வனப்புறப் பூரித்து நின்றது. அவளுடைய மார்புத்துணி தூக்கத்திலே கழன்று போய்விட்டது. தேவ ஸ்திரீயோ, கந்தர்வ ஸ்திரீயோ என்று தேவ கந்தர்வர் கண்டாலும் மயங்கத்தக்கவாறு அத்தனை எழிலுடன் படுத்திருந்தாள்.

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்

·         (International Red Cross and Red Crescent Day) மே 8ஆம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

·         முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகார்த்தாவுமான ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) அவர்களின் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது.

மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

8 ஆவது கட்டத் தேர்தல்: அமேதி உள்பட 64 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - தினமணி

சுப்ரதா ராயின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது - தி இந்து

பிற்படுத்தப்பட்டவன் என்பதால் என் மீது பழி சுமத்துகிறார்கள் ... - தினமணி

இலங்கை பயங்கரவாதிகள் பட்டியலில் 32 தமிழ் அகதிகள்! -  தினமணி

இந்தியா- இலங்கை அணுசக்தி ஒப்பந்தம்? - தினமலர்

 தொடக்கப்பள்ளிகளில் மொழி சிறுபான்மையினருக்கு பிராந்திய ....தினத் தந்தி

2-வது வெற்றியைப் பதிவு செய்தது மும்பை -  தினமணி

வீடு வாடகைக்கு   

A penthouse apartment on 10th floor consisting of 3 bedrooms, hall, kitchen with 3 bathrooms and a modular kitchen 2 bedrooms have 2 attached balconies and the third bedroom has a huge open terrace of 1200 sq ft area. Drawing room also has an attached balcony. The apartment is park facing and is located only 1 km from sector 13 metro station. Extra amenities:

1. Covered car parking;

2. Security;

3. Power backup;

4. RO (Aquaguard for water purification);

5. Geyser in 2 bathrooms & kitchen;

6. Complete wooden cupboards in all 3 bedrooms;

7. Separate area for washing machine;

Size of the apartment: 1675 sq. feet; Size of terrace : 1200 sq.feet; Preference is for company lease. For details, please contact Ms. Veena Grover at 9910046191. (Principal of DTEA, Janakpuri.)

Required  3  Bed  Room  House  For  Husband And Wife In  Gurgaon  Rent  Should  Be  All  Inclusive  Rs 22000/-.  Interested Party  Can  Contact  Shankarraman  Mobile  No 9650590381   Email  Id  Shankarraman123@Hotmail.Com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

07/05/2014

10.30 A.M. to 7.00 P.M

Twin Art Gallery-II,C.V. Mess, Janpath

Exhibition

of some rare photographs of Dr. Rashid Jahan. 

Indira Gandhi National Centre for the Arts

 

10/05/2014

06.00 P.M. Onwards

Delhi Tamil Sangam, Tamil Sangam Marg, Sector-5, RK Puram, New Delhi 110022

 6 PM

Carnatic Vocal/Tamil Isai by Kumari R.Sowmya(Disciple of Dr.P.B. Kannakumar) will be accompanied on Violin by Sh.V.S.K. Annadurai, Mridangam by Delhi R.Vignesh, Kanjira by Sh. K. Ramamurthy & on the Ghatam by Sh.J. Haree Prasad.

7.30 P.M

Bharathnatyam by Kumari Priya Rajamani(Disciple of Smt. Rajeshwari Natrajan)

 

K.Ramamurthy (9818765754)

11/05/2014

06.30 P.M. Onwards

சிறப்பு பட்டிமன்றம்

தலைப்பு: குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக  அதிகம் விட்டுக்கொடுத்துப் போவது மருமகளே! மாமியாரே!

நடுவர்: திருமதி ரமாமணி சுந்தர்

 

 

11/05/2014

10.00 A.M. Onwards

Lok Kala Manch, Lodhi Road (Behind Sai Baba Temple). nch, New Delhi

Mridangam Arangetram of

Master B.Sai Karthik

Disciple of Kumbakonam Shri N.Padmanaban

Guruvayoor DR. T.V. Manikandan - Vocal and kalaimamani Shri. V.S.K.

 Chakrapani - Violin and Elaththur shri. N. Harinarayanan - Ghatam

Bus Arrangement Will Be Available From Mother Diary, Sector-2, Rohini, Delhi-85 At 8 Am Sharply.

 

 

 

 

 

J. Vishwanathan –9911494023

S. Natarajan-     

9871166718

Krishnamoorthy- 9971362988

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment