Friday, May 9, 2014

09-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

09-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை-௨௬ (26) வெள்ளி , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 31

விசாலாட்சிக்கு நேர்ந்த சங்கடங்கள்

அவள் அறைக்கதவைத் தாழ்ப் போடவில்லை. கிழவி ராமுப்பாட்டியின் இருமல் சத்தம் காதில் விழாதபடி, சோமநாதய்யர் தம் பத்தினியுடன் மாடிமேல் கொல்லைப் புறத்திலிருந்த அறையில்-அதாவது கிழவியினுடைய அறையிலிருந்து எத்தனை தூரம் தள்ளியிருக்க சாத்தியப்படுமோ, அத்தனை தூரத்தில்-இராத்திரிகளிலே படுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் அன்று அந்த ஏகாதசி இரவில் சோமநாதய்யரின் மனைவி முத்தம்மா அவருடன் படுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், அவள் அன்று மாதவிடயாதலால் வீட்டுக்கு விலக்குற்றவளாய், வெளித் திண்ணையில் ஒரு மூங்கிலறை கட்டி அதற்குள் நேர்த்தியான திரைகள் கட்டி ஒரு கட்டில் மெத்தை போட்டு அதன்மீது படுத்திருந்தாள். அவளுடைய மூன்றாங் குழந்தையாகிய அனந்தகிருஷ்ணன் மாத்திரம் அவளுடன் படுத்திருந்தான். ராமநாதனும் ராமகிருஷ்ணனும் மேலே சோமநாதய்யரின் கட்டிலுக்கும் அவருடைய மனைவியின் கட்டிலுக்கும் புறத்தே குழந்தைகளுக்கென்று போட்டிருந்த மூன்றாங் கட்டிலின்மீது படுத்திருந்தனர்.

 

நள்ளிரவு, சோவென்று மழை கொட்டுகிறது. அந்த மழையாகிய தாயின் பாட்டின் குரலில் மயங்கிப் போன குழந்தைகளைப் போல் ராமுப்பாட்டியும், தோட்டத்தில் வெளிக் குச்சிலில் படுத்திருந்த தோட்டக் காவலனும், திண்ணையில் படுத்திருந்த முத்தம்மாளும், அவளருகே அனந்த கிருஷ்ணனும், உள்ளே விசாலாட்சியும் சந்திரிகையும், மேலே ராமநாதனும் ராமகிருஷ்ணனும் எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில் மூழ்கி விட்டனர். அப்போது ஒரு ஆள் மாத்திரம் நித்திரை செய்யவில்லை. அது நம்முடைய சோமநாதய்யர். சோமநாதய்யருக்கு வயது அப்போது சுமார் முப்பதிருக்கும். ஆள் நல்ல அழகன். 'ஸாண்டோ' இரும்பு குண்டு போட்டு அவருடைய இரண்டு புஜங்களும் அழகாகப் பருத்திருந்தன. தோட்சதைகள் நன்கு திரண்டிருந்தன. முன்னங்ககைகள் செவ்வனே உருட்சி பெற்றிருந்தன. விரல்கள் உறுதி பெற்றிருந்தன. மார்பு நேர்த்தியாகப் படுத்திருந்தது. வயிறு நன்கு படிந்திருந்தது. மேலும் பலவித அப்யாஸங்களையும் அவருடைய தொடைகளும் கால்களும் வலிமையும் உறுதியும் அழகுறச் சமைந்திருந்தன. ஆனால் அவருக்குத் தலைமயிர் மாத்திரம் கொஞ்சம் நரைக்கத் தொடங்கிவிட்டது. கொஞ்சம் வழுக்கையுமுண்டு. கண் பார்வை கொஞ்சம் சொற்பம். அதற்காக ஐரோப்பியக் கண் சோதனை வைத்தியரிடமிருந்து உயர்ந்த விலையில் மூக்குக் கண்ணாடி வாங்கி அதற்குத் தங்கக் கம்பி போட்டு மாட்டிக் கொண்டிருந்தார். முகம் நன்றாக சவரம் பண்ணி மிகவும் தளதளப்பாகவும் அழகாகவுமிருந்தது. அவர் மாத்திரம் அன்றிரவு நித்திரை புரியவில்லையென்றேன். ஏன்? என்ன செய்து கொண்டிருந்தார்? மெல்ல மாடியை விட்டுக் கீழே இறங்கினார். விசாலாட்சி படுத்திருந்த அறைக்குப் புறம்பே வந்து நின்றார். கதவை மெல்ல அசைத்துப் பார்த்தார். கதவு விசாலாட்சியின் சூதற்ற தன்மையால் திறந்து கிடந்தது. உள்ளே நுழைந்தார்.

விசாலாட்சி படுத்திருந்த கட்டிலின் பக்கத்தே போய் நின்று கொண்டு அந்த திவ்யமான ஒளியில் அவளுடைய திவ்ய விக்ரஹத்தைக் கண்டார். தன்னை மறந்து போய் அவள் மேலே கையைப் போட்டார். அவள் திடுக்கிட்டு விழித்து இவரைப் பார்த்தவுடன் அஞ்சி மார்புத் துணியை நேரே போர்த்துக் கொண்டாள். அப்பால் இவரை நோக்கி மிகவும் கோபத்துடன்:- ''இங்கு எதன் பொருட்டாக இந்த நேரத்தில் வந்தீர்?'' என்று கேட்டாள். இவர் ஏதோ வழவழவென்று மறுமொழி சொன்னார். இவருடைய சொற்களின் ஒலியாலும் முகக் குறிகளாலும் இவருடைய இருதயம் சுத்தமில்லையென்பதை அவள் உணர்ந்துகொண்டு தன் இடுப்பில் சொருகியிருந்த கூரிய கத்தியன்றை எடுத்து இவருடைய மார்புக்கு நேரே நீட்டினாள். இவர் பயந்து போய் இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார். இவர் இங்ஙனம் நிற்பதைக் கண்டு விசாலாட்சி இடிபோன்ற உரத்த குரலில் ''இங்கிருந்து வெளியேறிப்போம்'' என்றலறினாள்.

 

''குழந்தையை எழுப்பிவிடாதே'' என்று சோமநாதய்யர் மெல்ல ஜாடைகள் பேசுவது போலே கிளுகிளுத்துச் சொன்னார். முன்னைக் காட்டிலும் உரப்பாக விசாலாட்சி முப்பத்து மூன்று இடிகள் சேர்ந்து இடிக்கும் குரலில் ''போம்; இங்கிருந்து வெளியேறி!'' என்று மற்றொரு முறை கர்ஜித்தாள். சோமநாதய்யர் வெலவெலத்துப் போய் வெளியேறி மாடிக்குச் சென்று தன் அறைக்குள்ளே போய், அறைக் கதவைச் சார்த்தித் தாழிட்டு, விளக்கையணைத்துவிட்டு உள்ளே கட்டில் மீது படுத்துக் கொண்டு மேலெல்லாம் போர்வை போட்டு மூடிக் கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்க முயன்றார். ஆனால் அவருக்குத் தூக்கம் வரவில்லை. உடம்பெல்லாம் வியர்த்தது. போர்வையைக் கழற்றியெறிந்தார். குளிரெடுத்தது. மறுபடி போர்வையை எடுத்து மூடிக்கொண்டார். கைகால் உளைச்சல் சகிக்க முடியவில்லை. நரம்புகளைத் துண்டு துண்டாக வெட்டுவது போன்ற வேதனையுண்டாயிற்று. அவருடைய இருதயத்தில் ஆயிரம் பிசாசுகள் சேர்ந்து நர்த்தனம் செய்வது போன்ற பலவகைப்பட்ட வேதனை ஏற்பட்டது. அவருக்குத் தூக்கமெப்படி வரும்?

 

கீழே விசாலாட்சி, இவர் வெளியேறியவுடன் அறைக்கதவைத் தாழிட்டுக் கொண்டு மறுபடி கட்டிலின்மேல் வந்து படுத்துச் சில கணங்களுக்கெல்லாம் ஆழ்ந்த நித்திரையில் அமிழ்ந்து விட்டாள். மழை சரசரவென்று பொழிந்து கொண்டிருக்கிறது.

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

கோபால கிருஷ்ண கோகலே , CIE (மே 9, 1866 - பிப்ரவரி 19, 1915)

·         இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார்.

·         தன்னுடைய சுயசரிதையில் காந்தி, கோகலேவை தன்னுடைய அறிவுரையாளர் மற்றும் வழிகாட்டி எனக் குறிப்பிடுகிறார்.

·         1904 ஆம் புத்தாண்டு கௌரவிக்கப்படுபவர்கள் பட்டியலில் கோகலே CIE (கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி இண்டியன் எம்பையர்) ஆக நியமிக்கப்பட்டார், இது அவருடைய சேவைக்காக பேரரசின் ஒரு முறையான அங்கீகாரமாகும்.

மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

'மோடியின் வாரணாசி கூட்டத்துக்கு அனுமதி மறுத்தது சரியே' -  தி இந்து

 தேர்தல் ஆணையம் பாரபட்சம்: நரேந்திர மோடி- தினமணி

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தாமதமின்றி நடவடிக்கை: கருணாநிதி வலியுறுத்தல் -  தி இந்து

உலகின் மிகப்பெரிய கம்பெனிகள் பட்டியலில் 54 இந்திய நிறுவனங்கள் -  தினத் தந்தி

தொடரும் மழை: உயர்கிறது அணைகளின் நீர்மட்டம்-  தினமணி

இந்தியா- இலங்கை அணுசக்தி ஒப்பந்தம்? தினமலர்

2ஜி: தயாளு அம்மாளுக்கு தெரிந்தே ரூ. 200 கோடி பரிவர்த்தனை: கலைஞர் டிவி சரத்குமார் வாக்குமூலம் -  தினமணி

நைஜீரிய இளம்பெண்களை மீட்கும் பணியில் சீனா, பிரிட்டன் உதவி -  தி இந்து

10 வயதுக்கு மேல் வங்கி கணக்கு தொடங்கலாம்: ஆர்பிஐ - -  தி இந்து

 பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியீடு: மறு கூட்டலுக்கு உடனே ...தினத் தந்தி

கெய்ல்-மேக்ஸ்வெல்: வெற்றி யாருக்கு?-  தினமணி

வீடு வாடகைக்கு   

A penthouse apartment on 10th floor consisting of 3 bedrooms, hall, kitchen with 3 bathrooms and a modular kitchen 2 bedrooms have 2 attached balconies and the third bedroom has a huge open terrace of 1200 sq ft area. Drawing room also has an attached balcony. The apartment is park facing and is located only 1 km from sector 13 metro station. Extra amenities:

1. Covered car parking;

2. Security;

3. Power backup;

4. RO (Aquaguard for water purification);

5. Geyser in 2 bathrooms & kitchen;

6. Complete wooden cupboards in all 3 bedrooms;

7. Separate area for washing machine;

Size of the apartment: 1675 sq. feet; Size of terrace : 1200 sq.feet; Preference is for company lease. For details, please contact Ms. Veena Grover at 9910046191. (Principal of DTEA, Janakpuri.)

Required  3  Bed  Room  House  For  Husband And Wife In  Gurgaon  Rent  Should  Be  All  Inclusive  Rs 22000/-.  Interested Party  Can  Contact  Shankarraman  Mobile  No 9650590381   Email  Id  Shankarraman123@Hotmail.Com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

10/05/2014

06.00 P.M. Onwards

Delhi Tamil Sangam, Tamil Sangam Marg, Sector-5, RK Puram, New Delhi 110022

 6 PM

Carnatic Vocal/Tamil Isai by Kumari R.Sowmya(Disciple of Dr.P.B. Kannakumar) will be accompanied on Violin by Sh.V.S.K. Annadurai, Mridangam by Delhi R.Vignesh, Kanjira by Sh. K. Ramamurthy & on the Ghatam by Sh.J. Haree Prasad.

7.30 P.M

Bharathnatyam by Kumari Priya Rajamani(Disciple of Smt. Rajeshwari Natrajan)

 

K.Ramamurthy (9818765754)

11/05/2014

06.30 P.M. Onwards

சிறப்பு பட்டிமன்றம்

தலைப்பு: குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக  அதிகம் விட்டுக்கொடுத்துப் போவது மருமகளே! மாமியாரே!

நடுவர்: திருமதி ரமாமணி சுந்தர்

 

 

11/05/2014

10.00 A.M. Onwards

Lok Kala Manch, Lodhi Road (Behind Sai Baba Temple). nch, New Delhi

Mridangam Arangetram of

Master B.Sai Karthik

Disciple of Kumbakonam Shri N.Padmanaban

Guruvayoor DR. T.V. Manikandan - Vocal and kalaimamani Shri. V.S.K.

 Chakrapani - Violin and Elaththur shri. N. Harinarayanan - Ghatam

Bus Arrangement Will Be Available From Mother Diary, Sector-2, Rohini, Delhi-85 At 8 Am Sharply.

 

 

 

 

 

J. Vishwanathan –9911494023

S. Natarajan-     

9871166718

Krishnamoorthy- 9971362988

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment