Wednesday, May 28, 2014

28-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

28-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி-௧௪ (14) புதன் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 47

சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு விடுதலை

இந்த அநாதியான ஜீவ விரோதம் என்ற குணத்தை நீக்கி சர்வ ஜீவ காருண்யமும் சர்வ ஜவீ பக்தியும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற இச்சை சோமநாதய்யருக்கு உண்டாயிற்று. எனவே, அவர் ஆடு மாடுகளைக் கண்டால் முன்போல் இகழ்ச்சிக் கொள்கை கொள்வதில்லை. ஏழைகளைக் கண்டால், கொடிய நோயாளிகளைக் கண்டால், குரூபிகளையும் மிகுந்த முதுமையால் உருச் சிதைந்து விகார ரூபமடைந்திருப்போரையுங் கண்டால், அருவருப்பு எய்தி முகஞ் சுளிப்பதை நிறுத்தி, அவர்களை மானசீகமாக வந்தனை செய்யவும், ஆசீர்வாதம் பண்ணவும், இயன்றவரை புறக் கிரியைகளாலும் அவர்களுக்கு இனியன செய்யவும் முயன்றார்.

இதுவரை தமக்குக் கோபமும் அருவருப்பும விளைவித்துத் தம்மால் இகழ்ச்சியுடனும் எரிச்சலுடனும் புறக்கணிப்படும் மனிதர்களைக் காணும் போது முகமலர்ச்சி கொள்ளவும், அவர்களிடம் தாழ்மையுரையும் இன்சொற்களும் பேசவும் பழக்கப் படுத்திக்கொள்ளத் தொடங்கினார்.

 

இதெல்லாம் ஆரம்பத்தில் அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இ•தனைத்திலும் சிரமம் யாதென்றால், அவருக்கு முத்தம்மாளிடம் சுமுகமாக இருந்து அவளிடம் அன்பு காட்டுதல். அவளைக் கண்டவுடனே முகத்தைச் சுளிக்காமலிருக்க அவருக்கு சாத்தியப்படவில்லை. பரஸ்திரீகளிடம் காமமுறாமலிருப்பது அவருக்கு நாளடைவில் ஒருவாறு எளிதாயிற்று. ஆனால், முத்தம்மாளிடம் பிரேமை செலுத்துவதெப்படி? விவாகம் செய்து, ருதுசாந்தி முடிந்து சில மாதங்கள் வரை அவருக்கு முத்தம்மாளுடைய உறவும் ஊடாடுதலும் இன்பம் பயந்து கொண்டிருந்தன. அப்பால் அவை அவருக்கு ஸ¤கஹேதுக்களாகாமல் மாறிப் போய்விட்டன. பதினைந்தாம் வயதில் அந்த பாக்கியவதி அவருடைய சயன வீட்டுக்கு ஒரு ஆண் குழந்தையையும் கொண்டு வரத் தொடங்கினாள். அவர் அவளை முத்தமிடப் போகும் சமயத்தில் அந்தக் குழந்தை வீறிட்டழத் தொடங்கிற்று. அல்லது மல மூத்ர விஸர்ஜனம் செய்து அவளுடைய மடியையும் இவருடைய வேஷ்டியையும் அசுத்தப்படுத்தலாயிற்று. அன்றைக்குத் தொடங்கிற்று பெருங் கஷ்டம். பிறகு புதிய குழந்தைகள் இரண்டு பிறந்தன. தமக்கும் தம்முடைய மனைவிக்கும் இளமைப்பிராயம் தவறிவிட்டன என்ற எண்ணம் அக்குழந்தைகளைப் பார்க்குநதோறும் அவருள்ளத்தில் எழலாயின. இதினின்றும் அவர் குழந்தைகளிடம் அருவருப்படைதல் என்ற பரம மூடத்தனத்துக்குத் தம்மை ஆளாக்கிக் கொள்ளாமல் தப்பினார். ஆனால் அதைக் காட்டிலும் ஆயிரம் பங்கு அதிக மூடத்தனமாகத் தமது பத்தினியை நோக்கும் பொழுதெல்லாம் அவளிடத்தில் வெறுப்பெய்துவதும் முகத்தைச் சுளிப்பதுமாகிய தீயவழக்கத்தில் தம்மையறியாது விழுந்து, நாளுக்குநாள் அந்தப் படுகுழியில் தமது சித்தத்தை அதிக ஆழமாக அமிழ்ந்துபோக இடங் கொடுத்தார். இத்தனை காலத்துக்கு அப்பால் இவருக்குண்டாகிய புதிய தெளிவின் பயனாக, இப்போது அந்த மனைவியிடம் அன்பு செலுத்த முயற்சி பண்ணினார். அந்த முயற்சி இவருக்கு ஆரம்பத்தில் வேப்பெண்ணெய் குடிப்பதுபோல் மிகவும் கசப்பாக இருந்தது. அவளோ, இவரிடத்திலே தோன்றிய மாறுதலைக் கண்டு உள்ளத்தில் மகிழ்ச்சி கொண்டாளாயினும், இவருடைய புதிய அன்பை உறுதிப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்துடன் இவரைப் பல கடினமான சோதனைகளுக்கு உட்படுத்தத் தொடங்கினாள். எனவே இவர் நம்பிக்கையையும் ஞானத்தையுந் துணைக் கொண்டு வேப்பெண்ணெய் குடிக்கப்போன இடத்தில் இவருடைய முதுகில் சவுக்கடிகள் வேறு விழலாயின. மகா பதிவிரதையாகிய முத்தம்மா தன்னுடைய கணவன் இங்ஙனம் வேப்பெண்ணெய் குடிக்க வந்த சமயங்களில், அவருக்குச் சர்க்கரை முதலியன கொடுத்து அவருடைய கஷ்டத்துக்குப் பரிகாரங்கள் செய்யாதபடி இங்ஙனம் சவுக்கடிகள் கொடுத்து அவருடைய முதுகைக் காயப்படுத்தியது அவளுடைய விரத மகிமைக்குப் பொருந்துமோ என்று சிலர் ஐயுறலாம். ஆனால், அவள் உயர்ந்த பதிவிரதையாகிய காரணம் பற்றியே, எத்தனைக்கு எத்தனை விரைவாக நடத்துதல் சாத்தியமோ அத்தனைக்கத்தனை விரைவாக அவரை அஞ்ஞான விஷயத்திலிருந்து பரிபூர்ணமாக விடுவித்து அவருக்கு ஞானாமிர்தத்தைப் புகட்டவேண்டுமென்ற கருத்துடையவளாயினாள்.

ஜீவாமிர்தமாகிய தர்ம பத்தினியின் காதலை ஒரு பரம மூடன் வேப்பெண்ணெய்க்கு ஒப்பாகக் கருதி வருமிடத்தே, கூடிய அளவு விரைவில் அவனுக்கு என்ன கஷ்டம் விளைவித்தேனும் அவனை அந்த மகா நரகமாகிய அஞ்ஞானத்தினின்றும் வெளியேற்ற முயலுவதே தனது முக்கியக் கடமையென்று அவள் நியாயமாக நிச்சயித்தாள். அவனுக்கு சாசுவதமான ஞானமும் நித்ய இன்பமும் ஏற்படுத்திக் கொடுத்து அவனைக் காப்பாற்ற வேண்டுமென்று கருதி, அதனால் அவனுக்குச் சிறிது காலம் வரை அதிக சிரமங்கள் ஏற்பட்ட போதிலும் தீங்கில்லையென்று தீர்மானம் செய்தாள். ஒருவன் காலில் ஆழமாக விஷமுள் பதிந்திருக்கையில் அதை ஊசி கொண்டெடுக்கும்போது அவன் அந்த ஊசி குத்தும் வேதனையைப் பொறுக்கமாட்'மல் முள்ளையெடுக்க முயலாதபடி மிட்டாய் தின்று தன் மனதை அந்த நோயினின்றும் புறத்தே செலுத்த வேண்டுமென்று விரும்புவானாயின், அவனுக்கு இதத்தை நாடுவோர் அப்போது செய்யத்தக்கது யாது? அவனுக்கு ஊசி குத்துவதனால் வேதனையைப் பொருட்டாகக் கூடாதென்று அவனிடம் நிஷ்கருணையாகத் தெரிவித்து விட்டு ஊசியை ஆழமாகப் பதித்து விஷமுள்ளை எடுத்துக் களைதல் நன்றா? அல்லது, ஊசியைப் புறத்தே போட்டு விட்டு அவனுக்கு ஜிலேபி காபியால் விஷமுள்ளின் செயலை நிறுத்திவிடலாம் என்று அவன் நினைப்பது மடமையன்றோ? அதற்கு நாம் இடங்கொடுக்கலாமோ? அவன் அழ அழ, ஊசியை அழுத்தி விஷமுள்ள எடுத்தெறுந்தாலன்றி அவனுக்கு விஷமுள்ளின் செய்கையால் மரணமேற்படுமென்பதை அவனுக்கு வற்புறுத்திக் கூறி எங்ஙனமேனும் ஊசியை உபயோகித்தலன்றோ உண்மையான அன்புக்கும் கருணைக்கும் அடையாளமானது?

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

பெலூகா காவியா(Beluga Caviar) என்பது கஸ்பியன் கடலில் பிடிக்கப்படும் ஒருவிதச் சிறப்பான மீனின் முட்டைகள் ஆகும். ஈரான் நாட்டிலிருந்து‚ அல்மாஸ் (Almas) என்னும் நிறுவனப் பெயருடன் டப்பாக்களில் விற்கப்படுகிறது. ஒரு கிலோ காவியா 25000 டாலர்கள் (15 லட்சம் இந்திய ரூபாய்கள்) ஆகும். இந்த டப்பாக்கள் 24 காரட் தங்கத்தால் செய்யப்பட்டதாகும்.

 

மிகவும் சிறிய, இந்த முட்டைகள் காலை உணவுக்கு, ரொட்டியில் தடவி உண்ணப்படுகிறது. மிகச் சிறிய வட்டமான டப்பா (Tin) ஒன்றில் 200கிராம் அளவில் இந்தக் காவியாக்கள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த ஒரு டப்பாவின் விலை 5000 டாலர்கள் (3 லட்சம் இந்திய ரூபாய்கள்).

மேலும் படிக்க  

செய்திகள்

கறுப்புப் பண விவகாரத்தை விசாரிக்க சிறப்புக் குழு அமைப்பு- தி இந்து

ஜூன் 1 முதல் மின் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் ... -  தினமணி

மதிப்பெண் சான்றிதழ்களை "லேமினேசன்" செய்ய வேண்டாம்: அரசு ... - தினத் தந்தி

பயங்கரவாதச் செயல்களை தடுத்து நிறுத்துங்கள் நவாஸ் ஷெரீஃப்பிடம் பிரதமர் மோடி கண்டிப்பு -  தினமணி

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து: பிரிவு 370 குறித்து விவாதிக்க அரசு தயார் -  தினமணி

ஜாமீனில் வெளிவந்தார் அரவிந்த் கேஜரிவால் -  தினமணி

2016ல் ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ்:ஒபாமா திட்டம் யாஹூ

முதல் சுற்றிலேயே ஸ்டான், லீ நா வெளியேற்றம்- தினமணி

மணமகன் / மணமகள் தேவை   

Name: R. Ramanathan, Place of Birth: Purasaiwalkam,Chennai, Qualification: BCA, Job Details: Works for Dell at Porur DLF, chennai as a Team Lead in Quality.  Date of Birth: 18-05-1975, Time of Birth: 5.05 M, Lagnam: Mesham, Raasi: Kadagam, Star: Ayilyam, Padam: 3, Gothram: Bharadwajam, Parents: Father- Retired Govt employee, Mother-Housewife, , Siblings: 1 younger sister married and settled in Chennai, Salary per annum: 6 lakhs PA, Languages Known: Tamil, English, Hindi, Marathi, Konkani, and Kannada,Tamil Matrimony # M1054458, SS Matrimony # 98100/75

Name:  Rajan Iyer, Qualification: BA, MBA, PG Dip in Container & Logistic Management, Working : Asst. Manager ( Marketing),  Gulf Ocean Shipping P Ltd, New Delhi, Age:  28 years( 3rd Nov 1985), Height:   5' 9"

Parents :   Mrs Meera  Nandakumar & Mr. T. Nandakumar ( Retd.,), New Delhi, Star: Thiruvadhurai, Gothram:   Athreya, Contact No:   Mrs Meera  99104 85818, Home No:27562137. The family is predominantly from New Delhi.    They stay in,  Gayathri Apartments, Rohini, Delhi. The Groom is in the family business.  The company he works for belongs to the family.    The company is a very old logistic service provider here in Delhi.

Name: Jayashree Chandrasekaran, Qualification: BE, MS( Computer Science) from Georgia Tech, Atlanta, US, Working currently in Atlanta, US with Airwatch., Star: Poorattadhi 3rd Padam, Kumba Raasi, Gothram:   Srivatsa Gothram, Sect/Sub-sect:   Iyer: Vadamal, Height: 5'10", DOB: 16.12.88 ( Age:  25+), Sibling: No;   Parents: Mrs Meera Chandrasekaran works with SBI in Delhi. Mr. R. Chandrasekaran is a Chartered Accountant working as GM with Power Finance Corporation Ltd in Delhi. Contact:   Mrs. Meera 98115 13580    Mr. Chandrasekaran   98685 49073

வீடு வாடைகைக்கு    

Ready to move freshly painted, 5 BHK on 2nd floor available on RENT at Sector 92, Noida.  Ideal for a group of employed women OR men. Gated, CCTV, inhouse servant (can be hired for cooking also), Soft water for 24 hours, semi -furnished accommodation with all required privacy.  Other furnishings like cot + bed can be provided on request.  Taxi & door delivery of South Indian food  available on call.  Please contact manikandan2311@yahoo.co.in  / sujatha2311@hotmail.com  OR  Call : +91 9899165543 / 50.

2 BHK  one side park facing other side road facing with one pooja room available on rent at C Block, Sector 19, Noida.  Interested persons can contact Mr.N.K.Iyer at 9873711601/9811849601.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

31.05.2014

06.30 PM Onwards

Delhi Tamil Sangam

கும்பகோணம் என். பத்மநாபன் அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளவாத்திய நிகழ்ச்சி

 

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment