Monday, May 12, 2014

12-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

12-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை-௨௯ (29) திங்கள் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

Avvai Tamil Sangam's yet another initiative to connect people with the help of technology this time. Yes.... Creating a What's App group.  It will help sharing your thoughts, and also be updated with "Nammai chutri".

Please click "ATS What's App" if you wish to join our group.

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 33

விடுதலை

திடீரென்று விசாலாட்சி அவர்களுக்கு முன்னே தோன்றி ''ஜீவன்முக்தி இவ்வுலகில் சாத்தியமென்பதே பொய். நீங்கள் அதையடைந்திருக்கிறீர்களோ? அடைந்தோர் யாரையேனும் பார்த்திருக்கிறீர்களோ?'' என்று கேட்டாள்.

 

''சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இருந்தார்; அவர் பெரிய ஜீவன்முக்தர்'' என்று சோமநாதய்யர் சொன்னார்.

 

அன்று சாயங்காலம் முத்தம்மாளிடம் அனுமதிபெற்றுக் கொண்டு விசாலாட்சி சந்திரிகையுடன் மயிலாப்பூரிலிருந்து புறப்பட்டுப் பட்டணம் தங்கசாலைத் தெருவிலிருந்த மற்றொரு பந்துவின் வீட்டில் போய் இறங்கினாள். இந்த பந்து யாரெனில் விசாலாட்சியின் பெரிய தாயார் மகள். அந்த அம்மாள் பெயர் பிச்சு. அவளுடைய புருஷனாகிய சங்கரய்யர் தங்கசாலைத் தெருவில் மிகவும் கீர்த்தியுடன் மிட்டாய்க் கடை வைத்துக் கொண்டிருந்தார். அதில் அவருக்குக் கன லாபம். அவர் கையில் தங்கக் காப்பு; வயிர மோதிரங்கள்; கழுத்தில் பொற்சரளி. அவருக்கு வயது முப்பதுக்கு மேலிராது, மிகவும் அழகான புருஷன். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவர் வீட்டுக்கு நம்முடைய விசாலாட்சி போய்ச் சேர்ந்தாள்.

 

அங்கு இவள் போன தினத்துக்கு மறுநாள் காசியிலிருந்து ஒரு பால சந்நியாசி வந்திருந்தார். இவர் ஜாதியில் தென்தேசத்துப் பிராமணர். ஆனால் பார்வைக்கு வட தேசத்தார்களைப் போலவே சிவப்பாகவும் புஷ்டியாகவும் உயரமாகவும் ஆஜானுபாகுவாகவும் இருப்பார். மிகவும் அழகிய வடிவமுடையவர்.

இவருக்கு நாலைந்து பாஷைகள் நன்றாகத் தெரியும். இவர் சங்கீதத்தில் அபார வித்வான். இவர் தம்மை ஜீவன் முக்தி அடைந்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டார். எனினும், சதா இவருடைய முகத்தில் கவலைக் குறிகள் இருந்து கொண்டேயிருந்தன. மகா மேதாவி. உலகத்து சாதாரண மூடபக்திகளையெல்லாம் போக்கிவிட்டார். ஆனால், தீய விதியின் வசத்தால் தமக்குத் தாமே மானசீகமான பல புதிய மூட பக்திகளும் பொய்ப் பிசாசுகளும் உற்பத்தி செய்து கொண்டு ஓயாமல் அவற்றுடன் போராடிக் கொண்டிருந்தார். அதாவது, அவர் இன்னும் ஜீவன் முக்தி அடைந்துவிடவில்லை. அடைய வேண்டிய மார்க்கத்திலிருந்தார். தாம் முக்தி அடைந்துவிட்டதாகவே அவர் பிறரிடம் சொல்லியது மட்டுமன்றித் தம்முடைய மனத்துக்குள்ளும் அவ்வாறே நிச்சயப்படுத்திக் கொண்டுவிட்டார்.

 

விசாலாட்சி தம் வீட்டுக்கு வந்த தினத்திற்கு மூன்று நாட்களின் பின்பு ஒரு மாலையில், நிலவு தோன்றும் பருவத்தில் மிட்டாய்கடை சங்கரய்யர் தமது வீட்டு மேடையில் அழகிய நிலா முற்றத்தில் நான்கு நாற்காலிகள் போட்டு நடுவே மேஜையின் மீது பட்சணங்கள், தேநீர், வெற்றிலை, பாக்கு, பூங்கொத்துக்கள் முதலியன தயார் செய்து வைத்தார். சங்கரய்யரும், காசியிலிருந்து வந்திருக்கும் பால சந்நியாசியும், சங்கரய்யருடைய மனைவி பிச்சுவும், விசாலாட்சியும் நால்வரும் அந்த நான்கு நாற்காலிகள் மீதிருந்து கொண்டு சிற்றுண்டியுண்ணத் தொடங்கினர். குழந்தை சந்திரிகை கீழே படுத்து உறங்கிவிட்டாள். அவளுக்குக் காவலாகக் கிழ இடைச்சி, ஒரு வேலைக்காரி, படுத்திருந்தாள்.

நேர்த்தியான நிலவிலே மிட்டாய்க்கடை சங்கரய்யர் வீட்டு மேடையில், அந்நால்வரும் பல வகையான இனிய பண்டங்களை மெல்ல மெல்ல எடுத்துண்டு கொண்டிருக்கையிலே, சங்கரய்யருக்கும் காசியிலிருந்து வந்த பால சந்நியாசிக்கும் வேதாந்த விஷயமான சம்பாஷணை தொடங்கிற்று. சங்கரய்யர் வேதாந்தக் கிறுக்குடையவர். அதனாலேதான், அவர் இந்த சந்நியாசியைக் கண்டு பிடித்தவுடனே பரம குருவாக பாவித்துத் தம் வீட்டுக்கழைத்து வந்து தம்முடனேயே சில தினங்கள் தங்கியிருக்கும்படி கேட்டுக் கொண்டார். சந்நியாசியின் பெயர் நித்யானந்தர். அவருக்கு வயது இருபத்தெட்டுக்கு மேலிராது. மகா சுந்தரரூபி. வடிவெடுத்த மன்மதனைப் போன்றவர். அவரைக் கண்ட மாத்திரத்திலேயே நமது விசாலாட்சி அவர்மீது அடங்காத மையல் கொண்டுவிட்டாள். சந்நியாசியும் அங்ஙனமே விசாலாட்சியின் மீது பெருமையல் பூண்டார். சந்நியாசி மையல் கொள்ளுதல் பொருந்துமோ என்று நீங்கள் கேட்பீர்களாயின் அது சரியான கேள்வியன்று. மன்மதனுடைய பாணங்கள் யாரைத் தான் வெல்லமாட்டா?

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

உலக செவிலியர் நாள் (International Nurses Day) உலக நாடுகளனைத்திலும் மே 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

இன்று இறுதிக்கட்ட தேர்தல்: 3 மாநிலங்களில் 41 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு-  தினமணி

ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு -  தி இந்து

இன்று மாலைக்குப் பிறகு வாக்கு கணிப்புகளை வெளியிடலாம்-  தினமணி

 கருப்புப் பண தகவல் 2017-ல் கிடைக்கும்-  தி இந்து

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் "நோட்டீஸ்'தினமலர்

சீன ராணுவத்தில் 'குரங்குப் பட்டாளம்' : விமானப்படையில் இணைப்பு-  தி இந்து

துபாயில் பேருந்து விபத்து: 9 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலி-  தி இந்து

பெங்களூருவுக்கு அதிர்ச்சி அளித்த ஸ்மித், ஃபாக்னர்! - தினமணி

ஸ்பெயின் கிராண்ட்ப்ரீ: ஹேமில்டன் சாம்பியன் -  தினமணி

மணமகன் / மணமகள் தேவை    

Arun Narayanan, Age:  30.9.87  Height:    6'2" Qualification:   BSc( Hotel & Hospitality) working Manager  ( Banquets), JW Marriot, Juhu, Mumbai Star:  Moolam Parents:   Mr. R. Narayanan & Mrs. Mala Narayanan.    Mr. R. Narayanan working for Arvind Lalbhai Group in Mumbai. Both parents have been bankers,   Mr. R. Narayanan was in Bank of Baroda, left the bank and had joined Arvind group. Mrs. Mala was working for State Bank of Hyderabad.   Resigned and is a housewife now. Parents are all from New Delhi having studied in DTEA School Laxmi Bai Nagar & Pusa road respectively. Person's interested could contact Mr. R. Narayanan or Mrs. Mala Narayanan at 980889160 or 9820889641

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment