Friday, May 23, 2014

23-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

23-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி-௦௮  (09) வெள்ளி , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 43

சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு விடுதலை

'அடியே நாயே, நான் மறுவிவாகம் செய்துகொள்ளலாமென்ற வார்த்தையை என் காது கேட்க உச்சரிக்கக் கூடாதென்று நான் சொன்னேனோ, இல்லையோ? இப்போதுதான் சொல்லி வாய் மூடினேன். மறுபடி அந்தப் புராணத்தை எடுத்து விட்டாயே உனக்கு மானமில்லையா? வெட்கமில்லையா? சூடு சுரணையில்லையா? இதென்னடா கஷ்டமாக வந்து சேர்ந்திருக்கிறது? இவள் வாயை அடக்குவதற்கு ஒரு வழி தெரியவில்லையே, பகவானே! நான் என்ன செய்வேன்? ஏதேனும் ஒரு வியாதி வந்து இவள் வாயடைத்து ஊமையாய் விடும்படி கிருபை செய்யமாட்டாயா, ஈசா?'' என்று கூறி சோமநாதய்யர் பிரலாபித்தார்.

''சரி, போதும், போதும், காது குளிர்ந்து போய் விட்டது. என்னைக் காபி குடித்துவிட்ட மறுபடி இங்கு வரும்படி சொன்னீர்களே, எதற்காக?'' என்று முத்தம்மா மீண்டுமொருமுறை வினவினாள்.

 

''காபி குடித்துவிட்டுவா. பிறகு விஷயத்தைச் சொல்லுகிறேன். முதலிலேயே இன்ன காரணங்களுக்காகத்தான் அழைக்கிறேன் என்று உனக்கு முச்சலிக்கா எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால்தான் வருவாயோ?'' என்று சோமநாதய்யர் கர்ஜித்தார்.

 

''சரி; வருகிறேன். இதற்காகத் தொண்டையைக் கிழித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது ஹைகோர்ட்டில்லை; வீடு'' என்று சொல்லி முத்தம்மா அந்த ஏழைப் பிராமணன் மீது ஒரு கடைசி அஸ்திரத்தை பிரயோகம் செய்துவிட்டு கீழே இறங்கிச் சென்றாள்.

 

அவள் போனவுடன் சோமநாதய்யர்:- ''ஹைகோர்ட்டில் எனக்கு யாதொரு லாபமும் கிடைக்கவில்லையாம். அதற்காகக் கேலி பண்ணிவிட்டுப் போகிறாள். இந்த நாயின் வாயை அடக்க ஒரு வழி தெரியவில்லையே!'' என்று நினைத்து வருந்தினார்.

 

''வில்லம்பு சொல்லம்பு மேதினியிலே யிரண்டாம்;

வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்.''

என்று பழைய பாட்டொன்று சொல்லுகிறது. இந்தச் சொல்லம்பைப் பிரயோகிப்பதில் ஆண் மக்களைக் காட்டிலும் பெண்கள் அதிகத் திறமையுடையவர்களென்று தோன்றுகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஆண் மக்கள் பெண்மக்களுக்குச் செய்யும் சரீரத் துன்பங்களும், அநீதிகளும், பலாத்காரங்களுமே போலும். வலிமையுடையோர் தம் வலிமையால் எளியாரைத் துன்பப்படுத்தும்-போது எளியோர் வாயால் திரும்பத் தாக்கும் திறமை பெறுகிறார்கள். கை வலிமை குறைந்தவர்களுக்கு அநியாயம் செய்யப்படுமிடத்தே அவர்களுக்கு வாய்வலிமை மிகுதிப்படுகின்றது. மேலும், மாதர்கள் தாய்மாராகவும் சகோதரிகளாகவும் மனைவியராகவும் மற்ற சுற்றத்தாராகவும் இருந்து ஆண் மக்களுக்கு சக்தியும் வலிமையும் மிகுதிப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் வேலை செய்கிறார்கள். அவ்வலிமையும் சக்தியும் தமக்கு விரோதமாகவே செலுத்தப்படுமென்று நன்கு தெரிந்த இடத்திலும், மாதர்கள் தம்மைச் சேர்ந்த ஆண் மக்களிடம் தமக்குள்ள அன்பு மிகுதியாலும், தாம் ஆடவர்களின் வலிமையை சார்ந்து வாழும்படி நேர்ந்திருக்கும் அவசியத்தைக் கருதியும், அவர்களிடத்தே மேற்கூறிய குணங்களேற்படுத்தி வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இடையின்றி முயற்சி பண்ணுகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ளவேண்டிய குணங்களெல்லாவற்றிலும் மிக மிகமிக உயர்ந்த குணமாவது பொறுமை. மனிதனுடைய மனம் சிங்கம் போல் தாக்குந் திறனும், பாயுந் திறனும் கொண்டிருப்பது மட்டுமேயன்றி ஒட்டகத்தைப் போலே பொறுக்குந் திறனும் எய்தவே டும். அவ்விதமான பொறுமை பலமில்லாதவர்களுக்கு வராது. மனத்திட்டமில்லாதோரின் நாடிகள் மிகவும் எளிதாகச் சிறகடிக்கக் கூடியன. ஒரு இலேசான எதிர்ச்சொல் கேட்கும்போதும், இலோசன சங்கடம் நேரும்போதும் அவர்களுடைய நாடிகள் பெருங் காற்றிடைப்பட்ட கொடியைப் போல் துடித்து நடுங்கத் தொடங்குகின்றன. மனத்திட்பமில்லாதோருக்கு நாடித் திட்பமிராது. அவர்களுக்கு உலகத்தில் புதிய எது நேர்ந்தபோதிலும், அதை அவர்களுடைய இந்திரியங்கள் சகிக்குந் திறமையற்றவனவாகின்றன. மனவுறுதியில்லாத ஒருவன் ஏதேனும் கணக்கெழுதிக் கொண்டிருக்கும் போது, கக்கத்திலே ஏதேனும் குழந்தைக் குரல் கேட்டால் போதும், உடனே இவனுடைய கணக்கு வேலை நின்றுபோய்விடும். அல்லது தவறுதல்களுடன் இயல்பெறும். அடுத்த வீட்டில் யாரேனும் புதிதாக ஹார்மோனியம் அல்லது மிருதங்கம் பழகுகிற சத்தம் கேட்டால் போதும். இவனுடைய கணக்கு மாத்திரமேயன்றி சுவாசமோ ஏறக்குறைய நின்று போகக் கூடிய நிலைமை எய்திவிடுவான். புதிதாக யாரைக் கண்டாலும் இவன் கூச்சப்படுவான்; அல்லது பயப்படுவான்; அல்லது வெறுப்பெய்துவான். மழை பெய்தால் கஷ்டப்படுவான். காற்றடித்தால் கஷ்டப்படுவான். தனக்கு சமானமாகியவர்களும் தனக்குக் கீழ்ப்பட்டவர்களும் தான் சொல்லும் கொள்கையை எதிர்த்து ஏதேனும் வார்த்தை சொன்னால், இவன் செவிக்குள்ளே நாராச பாணம் புகுந்தது போலே பேரிடர்ப்படுவான்.

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

இலக்கியம்

இலக்கியம் என்பது விரிந்த பொருளில் எழுதிய அனைத்தையும் குறிக்கும். இந்த வரையறையின் கீழ் இலக்கியத்தை இரு வகைகளாக பிரிக்கலாம்:

·         இன்பியல் இலக்கியம்

'இன்பியல்' இலக்கியம் "கற்போர் உள்ளத்துக்கு இன்பம் தரும் நூல்கள்".

·         அறிவியல் இலக்கியம்

அறிவியல் இலக்கியம் கற்போருக்கு அறிவை முதன்மையாக தரும் இலக்கியம்.

தமிழ் குறைந்தது 2000 வருடங்கள் இலக்கிய வளமும் தொடர்ச்சியும் கொண்ட ஒரு மொழியாகும். எனினும், தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலானவை இன்பியல் இலக்கியங்களே. இது "இலக்கிய வளர்ச்சி அரசர்களையும் குறுநில மன்னர்களையும் சுற்றி வந்ததால்" ஏற்பட்டிருக்கலாம். அதன் விளைவாக இலக்கியம் என்ற சொல் தமிழில் இன்பியல் இலக்கியத்தையே பெரும்பாலும் குறித்து நிற்கின்றது. சிறுகதை, நாவல், கவிதை, நாடகம் ஆகிய எழுத்துக் கலை வடிவங்களே இன்று தமிழ் இலக்கியம் என பொதுவாக கருதப்படுகின்றது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிவியல் இலக்கிய படைப்புகள் மிக அரிது. வரலாற்று ரீதியில் வடமொழியுடனும் தற்கால ரீதியில் ஆங்கிலத்திடனும் ஒப்பிடுகையில் இந்தக் குறை தெளிவாக தெரியும். இன்று அறிவியல் தமிழ் இலக்கியத்தின் தேவை கருதி அறிவியல் தமிழை வளக்க தமிழ்நாடு அரசும் தமிழ் ஆர்வலர்களும் பெருதும் முயன்றுவருகின்றனர். இலக்கியம் இலக்கியத்துக்காக என்பதை விட இலக்கியம் மக்களின் பயன்பாட்டுக்காக என்பதே அறிவியல் தமிழின் ஒரு முக்கிய விழுமியம் எனலாம்.

நரேந்திர மோடி பதவியேற்பு விழா: ராஜபட்சவை அழைப்பதற்கு ஜெயலலிதா எதிர்ப்பு - தினமணி

'ஜனநாயகத்தை கொண்டாடி மகிழவே ராஜபக்சேவுக்கு அழைப்பு'– தி இந்து

காங்கிரசில் வெடித்தது உட்கட்சி குழப்பம்: கூட்டணி கட்சிகளும் ... - யாஹூ

சீனாவில் தொடர் குண்டுவெடிப்பு: 31 பேர் பலி-  தினமணி

நரேந்திர மோடிக்கு அப்துல் கலாம் சொன்ன முக்கிய 3 அறிவுரைகள்- தினத்தந்தி

புகைப் பிடிப்போருக்கு மின் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ... - தி இந்து

பார்வையற்றோருக்கும் ஏ.டி.எம்.,புதிய வசதி விரைவில் அறிமுகம்- யாஹூ

மைன்ட்ரா நிறுவனத்தை வாங்கியது ஃபிளிப்கார்ட் -  தி இந்து

'அண்டார்டிகாவில் பனிப் பாறைகள் உருகுவது இருமடங்காக அதிகரிப்பு – தி இந்து

ஐ.பி.எல். கிரிக்கெட்: 8–வது வெற்றியுடன் 'பிளே–ஆப்' சுற்றுக்கு ... - தினத்தந்தி

உபெர் கோப்பை: அரையிறுதியில் இந்தியா-  தினமணி

மணமகன் / மணமகள் தேவை   

Name CHI SURYAKIRAN, Qualification: B. Tech, (JNTU), MS (BITS). Employed in Infosys at Hyderabad. Designation Technology Analyst, Place of job Now working at client site in USA. Salary PM / PA Rs.6,50,000, Height 5 ' 8", Weight ,Complexion Fair, Blood group, Family particulars. Father's Name: S. SITARAMA IYER, Retired as Supervisor, Department of Posts, Mother's Name: A.JAYALAKSHMI, Working in APSRTC, at Hyderabad. For details Contact: Email sitarama_iyer@yahoo.com, Phone Number 040-27240517, Mobile: 09959882737, 07382800217.

Name:  Rajan Iyer, Qualification: BA, MBA, PG Dip in Container & Logistic Management, Working : Asst. Manager ( Marketing),  Gulf Ocean Shipping P Ltd, New Delhi, Age:  28 years( 3rd Nov 1985), Height:   5' 9"

Parents :   Mrs Meera  Nandakumar & Mr. T. Nandakumar ( Retd.,), New Delhi, Star: Thiruvadhurai, Gothram:   Athreya, Contact No:   Mrs Meera  99104 85818, Home No:27562137. The family is predominantly from New Delhi.    They stay in,  Gayathri Apartments, Rohini, Delhi. The Groom is in the family business.  The company he works for belongs to the family.    The company is a very old logistic service provider here in Delhi.

வீடு வாடைகைக்கு     

1 BHK available for rent in Pratap Vihar, near Santhosh Medical  College, 4 kms from Sect 63 Noida, only for south indians. Contact Dr.Ram Mobile: 9716934196.

HOUSE FOR RENT – Available at Sector III Vaishali, Ghaziabad near Pushpanjali Hospital/Mahagun Mall, from June 1, 2014 - Two bedroom flat, with a huge drawing/dining and big modular kitchen, bathroom with bathtub, second floor, very close to vaishali metro station and close to Delhi border/Ghazipur.  Tamilians preferred – Rent Rs.15,000.  Contact 8826655855 for details.

Ready to move freshly painted, 5 BHK on 2nd floor available on RENT at Sector 92, Noida.  Ideal for a group of employed women OR men. Gated, CCTV, inhouse servant (can be hired for cooking also), Soft water for 24 hours, semi -furnished accommodation with all required privacy.  Other furnishings like cot + bed can be provided on request.  Taxi & door delivery of South Indian food  available on call.  Please contact manikandan2311@yahoo.co.in  / sujatha2311@hotmail.com  OR  Call : +91 9899165543 / 50.

2 BHK  one side park facing other side road facing with one pooja room available on rent at C Block, Sector 19, Noida.  Interested persons can contact Mr.N.K.Iyer at 9873711601/9811849601.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

24.05.2014

06.00 AM Onwards

 

South Delhi Apartment, Plot# 8, Sector-4, Dwarka, New Delhi

4th Akhand Sai Gayathri Jaap

06.00 AM  Ganapati Pooja

06.15AM Ekadasa Rudra Jaap and Abhishekam to Sai Baba

08.30AM Aatri " Shirdi Majhe Pandharpur"

08.45AM Start of Akhand Shirdi Sai Gayathri Jaap and it will continue till next morning 0900hrs. (Jaap will continue for whole day and night )

 

9811500224

9873690224

25.05.2014

09.30 AM Onwards

09.00AM Vishnu Sahasranama Parayanam / Yagna with 1008 times

09.30AM  Vishnu Sahasranama Homam

11.30AM Puranahathi

11.45AM Shirdi Sai Baba Palki procession

12.00PM Maha aarti and followed by Mahaprasadam distribution

24.05.2014

06.30 PM Onwards

Delhi Tamil Sangam

தமிழிசை - டாக்டர். மகாலட்சுமி ராஜன்  குழுவினர்

 

 

25.05.2014

 

11.00 AM, 02.00 PM, 06.00 PM புத்தம் புதிய திரைப்படம்

31.05.2014

06.30 PM Onwards

கும்பகோணம் என். பத்மநாபன் அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளவாத்திய நிகழ்ச்சி

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment