Monday, June 10, 2013

10-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

10-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௨௩(27)திங்கள், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 88

'குழந்தையின் காலில் முள் குத்துமே... கல் குத்துமே' என கவலைப்படாதீர்கள். இரண்டு வயது வரை குழந்தைகள் செருப்பு இல்லாமலேயே நடப்பதுதான் ஆரோக்கிய மானது. குழந்தையின் பாதங்கள் வலுவடைய இது முக்கியம்.

நாளொரு நாலடி 163

பொருட்பால்துறவற இயல் பெரியாரைப் பிழையாமை

பெரியாரை அவமதித்து நடவாமை( AVOIDANCE OF OFFENCE TO THE GREAT)

அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்

மிகைமக்க ளான் மதிக்கற் பால; -நயமுணராக்

கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்

வையார் வடித்தநூ லார்.

 

பெரியோர் அவமதிக்கும் அவமானமும் புகழும்புகழ்ச்சியுமே பொருளாகக் கொள்ளப்படும்.

பொருள்:    

அவமதிப்பும் ஆன்றமதிப்பும் இரண்டும் மிகைமக்களான் மதிக்கற்பால-மதிப்பின்மையும் மிக்க மதிப்புமாகிய இரண்டும்மேன்மக்களாகிய பெரியோர்களால்மதித்தற்குரியனவாகும்; நயம் உணராக்கையறியாமாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும் -நன்மையை உணர்தலில்லாத ஒழுக்கமறியாக்கீழ்மக்களின் இழிப்புரையும் உயர்த்தும்ஏத்துரையும், வடித்த நூலார் வையார் - தெளிந்தநூலறிவினையுடையோர் ஒரு பொருளாகமனத்துட்கொள்ளமாட்டார்கள்.

Explanation (G. U. POPE):

Praise and dispraise of noble persons only of importance.

Both disesteem and thorough esteem are in the class of things that depend on the estimation of the great. Those who have a discriminating knowledge of true science, lay no stress on either the abuse or the fulsome praise of men who comprehend not moral principles, and know not the rules of propriety.

உங்களுக்குத் தெரியுமா?

தீக்சாபூமி அக்டோபர் 14, 1956 அன்று பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் முனைவர் பாபாசாகேப் அம்பேத்கர் பௌத்த சமயத்தைத் தழுவிய இடத்தில் எழுப்பப் பட்டுள்ள ஓர் வழிபாட்டுத்தலமாகும். இங்குள்ள தூபி மற்றும் நுழைவாயில்கள் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து அவர் எடுத்த இந்த முடிவு ஒடுக்கப்படும் இந்திய இளைஞர்களுக்கு இன்றும் வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.

 

தீக்சாபூமி மகாராடிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள பௌத்த சமயத்தினருக்கு ஓர் முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. அசோக விசயதசமி அன்றும் அக்டோபர் 14 அன்றும் பெரும்திரளான வழிபாட்டாளர்கள் இங்கு வருகின்றனர்.

 

தீக்சா என்ற பௌத்தர்களின் சொல் அவர்களின் சமயத்தை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. பூமி நிலத்தைக் குறிக்கும். எனவே, இதன் பொருள் பௌத்த மதத்தை ஏற்றுக்கொள்ளும் இடமாகும். டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையில் முக்கிய இடங்களாகப் போற்றப்படும் இரு இடங்களில் இது ஒன்று. மற்றொன்று மும்பையிலுள்ள சைதன்யபூமி ஆகும்.

 

இங்குள்ள பௌத்த விகாரம் அதன் கட்டிட வடிவமைப்பிற்கும் வரலாற்றுப் பின்னணிக்கும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. இந்தியாவின் சுற்றுலா மையங்களில் முதன்மையான இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய இரயில்வே நாக்பூரிலிருந்து கயா செல்லும் தொடர்வண்டிக்கு தீக்சாபூமி விரைவுவண்டி எனப்பெயரிட்டுள்ளது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

பாஜக தேர்தல் பிரசாரக் குழு தலைவர் மோடி    தினமணி

13-ஆவது சட்டத்திருத்தம் ரத்து: இலங்கையின் முயற்சியைத் தடுக்க வேண்டும்  -  தினமணி

என்.சி.டி.சி. அமைப்பதில் முன்னேற்றம் இல்லை: சுஷீல் குமார் ஷிண்டே  - தினமணி

செயற்குழு கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை? -  தினமணி

தேடுதல் பணியில் விமானம், 15 படகுகள் குமரி கடலில் மாயமான 5 ... -  தினகரன்  

"வாஜ்பாய் மருத்துவ செலவை வெளியிட வேண்டும்'   -  தினமணி

 

அமெரிக்காவுக்கு சரஸ்வதி சிலையை பரிசளித்துள்ள இந்தோனேசியா -  தினமலர்

புதுக்கோட்டை அருகே மரத்தில் மோதி கவிழ்ந்தது கார் தீப்பற்றி ...  -    தினகரன்  

 இந்திய பொருளாதாரம் மீண்டெழும்: ஜனாதிபதி . -   தின பூமி  

நடால் உலக சாதனை: பிரெஞ்சு ஓபனில் 8-வது பட்டம் வென்றார் - தினமணி

தாய்லாந்து பேட்மின்டன் கோப்பையை வென்றார் இந்தியாவின் ... தினகரன்    

வீடு வாடகைக்கு

3 bedroom independent second floor flat available for rent in Sector III Vaishali, Ghaziabad, bordering East Delhi.   Three bedroom, two bathrooms, huge kitchen and drawing and dining space.  Parking available in the ground floor.  All fixtures and fittings done - close to vishal mart, pushpanjali hospital and metro station....Expected rent Rs.16,000...Please contact R.K. Vasan 882 66 55 8 55.

வீடு  வாங்க / விற்க

Plot for sale in Swamy Nagar (near Kaveri palam) on the bank of cauveri river and 500 mtr from swamimalai Swaminatha swamy temple. Area 1000 Sqft. price Rs 1500 / sqft. For further details contact 9899379243.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

15/06/13

Delhi Tamil Sangam

2.00 PM & 6.00 PM

தமிழ் திரைப்படம்

Delhi Tamil Sangam

9811937936

9810271676

16/06/13

23/06/13

10.00 AM

தாளமணி P.வெற்றிபூபதி அவர்களின் மாணவர்கள் வழங்கும்

தாளப்ருமம் – மிருதங்கம் தாள வாத்தியம்

29/06/13

6.30 PM

குரு திருமதி கனகா சுதாகர் மாணவிகளின் பரதநாட்டியம்

30/06/13

6.00 PM

தில்லி திருமதி சுதா ரகுராமன் வழங்கும் தமிழிசை

தில்லி தமிழ் சங்கம் மற்றும் காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ்  

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment